தெலுங்கானா ஆளுநரான தமி ழிசை சவுந்தரராசன் புதுவை துணை நிலை ஆளுநராகவும், கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தெலுங்கானா பக்கம் போவதில்லை. ஆனால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் புதுவையில் அனைத்து காரியங்களை யும் இவரே செய்து வருகிறார். என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியின் முதல்வரான என்.ஆர்.ரங்கசாமி முதல் வர் என்கிற பெயர் மட்டும் இருந்தால் போதும் என எதையும் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், முன்னாள் பாஜக தலைவரான தமிழிசை தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையை யும் நுழைப்பேன், காலையும் நுழைப் பேன், என்னை யாராலும் தடுக்க முடி யாது என்று ‘தன்னடக்கமாக’ பேசி யுள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராக மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத் துள்ளது தொடர்பான புத்தக விழா அது. ஆனால் தெலுங்கானாவில் தன்னை கொடியேற்றக்கூட விடவில்லை.
ஆளு நர் உரையாற்றக்கூட விடவில்லை என்று பேசியுள்ளார். அந்தளவுக்கு அவ ருக்கு மரியாதை. தன்னுடைய ஆளுநர் பணி தொடர் பான புத்தகத்தை கூட அங்கே வெளி யிடாமல் தமிழ்நாட்டில் வெளியிட்டு விட்டு, தமிழ்நாட்டில் வாலையும் நுழைப் பேன், காலையும் வைப்பேன் என்று பேசு வது என்ன நியாயம் என்று தெரியவில்லை. இங்கே ஏற்கெனவே தமிழக ஆளு நர் ஆர்.என்.ரவி அண்ணாமலைக்கு போட்டியாக பாஜக மாநில தலைவ ராகவே மாறி, ஆளுநர் மாளிகையையே ஆர்எஸ்எஸ் அலுவலகமாக நடத்து கிறார். போட்டிக்கு இவரும் வந்து வாலை யும் நுழைப்பேன் என்கிறார். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளு நரும் தேவையில்லை என்றார் அண்ணா. பாஜக மாநிலத் தலைவர் என்ற மனநிலை யிலிருந்து தமிழிசை விடுபடவே இல்லை போலிருக்கிறது. தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அனைத் துக் கூட்டங்களிலும் தமிழிசை கூறிப் பார்த்தார். ஆனால் தாமரை பொசுங்கிப் போனதுதான் மிச்சம். இப்போது பக் கத்து மாநிலங்களில் ஆளுநராக இருந் தாலும் கூட இங்கே கட்சி வேலைப் பார்க்க முயல்கிறார் தமிழிசை. இது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.