சென்னை, டிச. 10 - வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் மால்லபுரம் அருகே கரையை கடந்தாலும் சென்னையிலும் காற்றின் வேகமும் அதிகரித்தது. பல பகுதிகளில் கனமழையும் கொட்டித் தீர்த்தது. இந்த புயல் காற்றால் மாநகர் பூங்காக்களில் முறிந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து அகற்றியதோடு, சாலை மற்றும் தெருக்களை சுத்தம் செய்த னர். இருப்பினும், ஒருசில இடங்க ளில் ஊழியர் பற்றாக்குறை, உப கரணங்கள் இல்லாததால் மரங்களை அகற்றுவதில் சுணக்கம் உள்ளது. இதுகுறித்து 123வது வார்டு உறுப்பி னர் எம்.சரஸ்வதி கூறுகையில், “வட்டத்திற்குட்பட்ட சாலைகள், பூங்காக்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுற்றுச் சுவர்கள் இடிந்துள்ளன. 123வது வட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஊழியர்களும், மரங்களை அகற்றுவதற்கான உப கரணங்களும் போதிய அளவில் இல்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளேன்”என்றார். இதுபோன்றே பிரச்சனை சில இடங்களில் நிலவு கிறது. தி.நகர் பகுதியை சேர்ந்த குடி யிருப்புவாசி ஒருவர் கூறுகையில், “சென்னை நகரில் இருந்த சரிபாதி மரங்கள் கடந்த கால மழை, புயல்களின்போது விழுந்தன. மாநகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு,
தற்போதுள்ள மரங்களின் தேவையற்ற கிளைகளை வெட்டி, கவாத்து செய்து இருந்தால், மரம் முறிந்து விழுந்ததையும், வேருடன் சாய்ந்ததையும் தவிர்த்திருக்கலாம். மாநகராட்சி ஊழியர்கள் இரவுபகலாக கடுமையாக பணியாற்றி மரங்களை, குப்பை கூளங்களை அகற்றி வருகின்றனர்” என்றார். இருவர் பலி மடிப்பாக்கம், ராம்நகரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி லட்சுமி(45), ராஜேந்திரன்(25) ஆகிய இருவர் உயிரிழந்தனர். சைதாப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் சாதாரண வீடுகள் இடிந்தன. சென்னை மெரினா, சீனிவாசபுரம், பெசன்ட்நகர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வீசிய சூறைக்காற்று மற்றும் கடல் அலையால் குடிசை வீடு கள் சரிந்துள்ளன. மீன்பிடி உபகரணங் கள் சேதமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர்ப்பகுதிகளில் ஓரிரு இடங்க ளில் மழைவெள்ளம் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் மக்கள் வெளியே வர முடியாத வகையில் தெருக்களில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் குடியிருப்பு களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குரோம் பேட்டையில் உள்ள அரசு மருத்துவ மனை வளாகத்தில் தேங்கி நிற்கும் வெள்ளத்தை மோட்டார் கொண்டு ஊழியர்கள் அகற்றினர். ஜிஎஸ்டி சாலை - கிழக்கு தாம்பரத்தை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.