அருமனை, ஜன.17 - தமிழகத்தில் பொங்கல் பண்டி கையையொட்டி, ஒரு வாரம் தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இந்நிலையில் வியாழக்கிழமை சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அதிக மாக இருந்தது. தமிழகம் மற்றும் கேரளா வின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உட்பட ஏராள மானோர் வருகை தந்தனர். மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ‘குமரியின் குற்றாலம்’ என அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு அதிகாலையில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து, அருவியில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சிறுவர்கள் நீச்சல் குளத்தில் குளித்தும், பூங்கா வில் விளையாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக திற்பரப்பு பேரூராட்சி மூலம் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. குலசே கரம் போலீசார், பேரூராட்சி பணியாளர் கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக போதிய இடமில்லா மல், பல கிலோ மீட்டர் தூரம் வாக னங்கள் அணிவகுத்து நின்றன. வியாழனன்று மாலை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின், திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கப்படும் வசதிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அருவியின் மேல் பகுதியில் உள்ள படகுத்துறை மூலம் சுற்றுலாப் பயணி கள் செல்லும் படகுகளையும் ஆய்வு செய்தார். ஆசியாவில் உயரமான பாலமாக திகழும் மாத்தூர் தொட்டி பாலத்தை பார்ப்பதற்கு கேரளா மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதி மக்கள் வந்த னர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அருவிக்கரை ஊராட்சி மற்றும் வேர்கிளம்பி பேரூராட்சி மூலம் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.