கோயம்புத்தூர், மார்ச் 26 - அதிமுக என்ற பிரதான கட்சிக்கு பதில் சொல்லலாம், பாஜக போன்ற சில்லரை கட்சிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார். கோவையில் டி.ஆர்.பி. ராஜா பேட்டியளித்தார். அப்போது, ‘திமுகவின் தேர் தல் அறிக்கை குறித்து அண்ணாமலை விமர்சித்து உள்ளாரே..’ என்ற கேள் விக்கு, “எதிரில் அதிமுக என்ற இயக்கம் உள்ளது. பிர தான எதிர்க்கட்சி அதிமுக. அது குறித்த கேள்விகளை மட்டும் கேளுங்கள். சில் லரை கட்சிகள் குறித்து கேட் டால் பதில் சொல்ல முடி யாது” என்றார். ‘உதயநிதி ஸ்டாலின் செங்கலை வைத்து அரசி யல் பண்ணுகிறார், அந்த ஸ்கிரிப்டை மாற்ற வேண் டும்’ என்று அண்ணாமலை பேசியிருப்பதற்கும் டிஆர்பி ராஜா பதிலளித்தார். “ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். திமுகவைத் திசை திருப்பு வதற்காகவே இது போன்ற கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன. தேர்தல் களத் தில் திமுக - அதிமுக மட் டுமே உள்ளது. எங்கள் எதிரி அதிமுக தான். அதைக் குறி வைத்து அடிப்போம். அதற் காக பொதுமக்களை சந்திக் கச் சென்று கொண்டிருக்கும் எங்களிடம் மற்றவர்கள் பற்றி கேள்வி கேட்டால் அது எங்களுக்கு கவனச் சிதறல் மட்டுமே. எனவே, பாஜக போன்ற சில்லரைக் கட்சி களை ஓரங்கட்டி விட்டு களத் தில் இருக்கும் உண்மை யான எதிரியை வீழ்த்த வியூ கம் வகுத்து கோவையில் மகத்தான வெற்றி பெறு வோம். கோவை தேர்தல் களம் சிறப்பாக உள்ளது. கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கண பதி ராஜ்குமார், இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெறுவார்” என்று கூறினார். அண்ணாமலை ஒரு பைசா கூட செலவு செய்ய மாட்டேன் என்கிறாரே, என்ற கேள்விக்கும், “எங்களது நண்பர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் எங்களுடன் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகிறார் கள், அவர்களுக்கு டீ, காபி போன்ற செலவுகள் எல்லாம் இருக்கும். அண்ணா மலைக்கு அப்படி யாரும் வருவதில்லை, அதனால் ஒரு பைசா கூட செலவு இல்லை என்று நினைக்கி றேன்” என்று காட்டமாக டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்தார்.