தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் ‘தீக்கதிர்’ நாளிதழுக்கான சந்தாவை வழங்கினார். அப்போது அமைச்சருக்கு, தாம் எழுதிய ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ எனும் நூலை ஜி.ராமகிருஷ்ணன் வழங்கினார். கட்சியின் தென்சென்னை மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் ஆகியோர் உடன் உள்ளனர்.