tamilnadu

img

தொழில் வளர்ச்சியும் தொழிலாளர் உரிமைக்கான போராட்டமும் - பி.கருப்பையன்

கடலூர் மாவட்டம் பெரும்பகுதி விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் 2லட்சத்து 77 ஆயிரத்தி 462 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்துக் கிடக்கின்றனர். தற்போது மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகளிலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு பெரிய அளவிற்கு வேலை வாய்ப்பு அளிப்பதில்லை. ஒரு சிலருக்கு வேலை அளித்தாலும் ஒப்பந்தப் பணி, தற்காலிக பணி, பயிற்சியாளர் என வேலைக்கு எடுத்து பின்னர் அனுப்பிவிடும் நிலையே உள்ளது. குறிப்பாக மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நிரந்தர தன்மைகொண்ட பணிகளுக்கு கடலூர் மாவட்ட இளைஞர்களை வேலைக்கு எடுக்காமல் வெளிமாநில தொழி லாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலை உள்ளது. என்எல்சிக்கு நிலம் கொடுத்த வர்கள், இறந்தோர் வாரிசு, அப்ரண்டீஸ் முடித்தவர்கள் என உள்ளூர் இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவுட்சோர்சிங் முறை அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஒப்பந்த தொழிலாளர் வேலையும் பறிக்கப்படுகிறது. என்எல்சி நிர்வாகம் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்வதோடு தற்போது காலிப் பணி யிடங்களில் பணியாற்றிவரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். காலியாக உள்ள நிரந்தர பணிகளுக்கு மாவட்டத்திலுள்ள இளை ஞர்களை பணியமர்த்திட வேண்டும். என்எல்சி நிர்வாகம் சுரங்கம்,தெர்மல் பகுதிகளை விரிவாக்கம் செய்து வேலைவாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.

தற்போது மாவட்டத்தில் இயங்கி வரும் சிப்காட், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களான ஐ.எல்.எப்.எஸ், டாக்கா போன்ற நிறுவனங்களில் நிலம் கொடுத்தவர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கும் வேலை அளித்திட வேண்டும். வடலூரில் செயல்பட்டுவந்த நெய்சர் பீங்கான் தொழிற்சாலை தற்போது செயல்படாமல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலையை புனரமைத்து உற்பத்தியை துவக்கிட வேண்டும். இதனால் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும். கடலூர் சிப்காட் மற்றும் கடலோரப் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட தொழிற்சாலைகளை உடனடியாக துவங்கிட வேண்டும். மூடிக் கிடக்கின்ற அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகள் திறந்து உற்பத்தியை துவக்கிட வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்த பழமைவாய்ந்த துறைமுகமான கடலூர் துறைமுகம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கப்பல் போக்குவரத்து நடைபெறாமல் உள்ளது. இத்துறை முகத்தை ஆழப்படுத்தி, விரிவுபடுத்தி கப்பல் போக்குவரத்தை துவங்கினால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதோடு மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும்.  மாவட்டத்தில் அதிகமாக விளையும் மரவள்ளிக்கிழங்கு, கொய்யா, முந்திரி பழம் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு தொழிற்சாலைகளை துவங்கினால் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை அளித்திடமுடியும்.

   தற்போது இயங்கி வரும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்க ளின் உரிமைக்கான தொடர் போராட்டங்களை சிஐடியு நடத்தி வரு கிறது. குறிப்பாக என்எல்சியில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்திட வேண்டுமென தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. இதன் விளைவாகவும், சிஐடியு பேச்சுவார்த்தையில் இருந்த காரணத்தினாலும் ஒப்பந்த தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளடக்கிய பேச்சுவார்த்தைக் குழு அமைக்க வைத்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று 6ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு, நிரந்தரப் படுத்துவது உள்ளிட்ட ஷரத்துக்கள் அடங்கிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடிந்தது. மின்சார வாரியம், போக்குவரத்து, கூட்டுறவு, உள்ளாட்சி, நுகர் பொருள் மற்றும் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நிரந்தர,ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்தி உரிமை களை பெற்றுத் தரும் சங்கமாக சிஐடியு திகழ்கிறது. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும், கட்டுமான தொழிலை பாதுகாத்திட வேண்டும், மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்திட வேண்டும், பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலை உயர்வை குறைத்திட வேண்டும், குறைந்தபட்ச கூலி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், நலவாரிய சலுகைகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் என அனைத்து பகுதி தொழிலாளர்க ளின்உரிமைக்காகவும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. தொழிலாளர்கள் போராடுகிற போது ஆதரவாகவும், நேரடியாக களத்தில் நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு வெற்றி பெறட்டும். போராடும் தொழிலாளர்களுக்கு உந்துசக்தியாக அமையட்டும்.