tamilnadu

img

விளையாட்டு

மினி உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற 9ஆவது சீசன் மினி உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி 3ஆவது முறையாக மினி உல கக்கோப்பையை கைப்பற்றியது இந்தியா. இந்நிலையில், மினி உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் ரூ. 58 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தொட ரில் இடம்பெற்றிருந்த வீரர்கள், பயிற்சி யாளர்கள், ஊழியர்கள் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்களை கவுரவிக்கும் வித மாக இந்த பரிசுத்தொகை வழங்கப்பட்டுள் ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

அசரென்கா அசத்தல்

சர்வதேச டென்னிஸ் போட்டிக ளின் முக்கிய தொடரான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் (ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்டது) அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசை யில் இல்லாத முன்னாள் கிராண்ட்ஸ் லாம் சாம்பியனான பெலாரசின் அச ரென்கா, உக்ரைனின் கலினினாவை (தரவரிசையில் இல்லாதவர்) எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அசரென்கா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதே போன்று தரவரிசையில் இல்லாத சுவிட்சர்லாந்தின் பென்கிச் 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் உக்ரை னின் டயானாவை (தரவரிசையில் இல்லாதவர்) வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். கிர்ஜியோஸ் அபாரம் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் அதிரடிக்கு பெயர் பெற்ற முன்னணி வீரரான ஆஸ்திரேலியாவின் கிர்ஜியோஸ், அமெரிக்காவின் மிக் டொனால்டை எதிர்கொண்டார் (இருவரும் தரவரிசையில் இல்லாதவர்கள்). இந்த ஆட்டத்தில் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற  கிர்ஜியோஸ் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 

ஐபிஎல் 2025 பந்துகளில் உமிழ்நீரை தடவிக் கொள்ளலாம்

கிரிக்கெட் விளையாட்டில் மிக முக்கியமான பழக்கம் பந்துக ளில் உமிழ்நீரை தடவிக்கொள்வது தான். அவ்வாறு தடவிக் கொண்டால் பந்து வழுவழுக்கும். இது ரிவர்ஸ் ஸ்விங்கிற்கும் சாதகத்தை ஏற்படுத்தும். இதனால் கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி பந்தில் உமிழ்நீரை தடவிக் கொள் வார்கள். ஆனால் கொரோனா பரவலின் போது பந்துகளில் உமிழ்நீரை தடவிக் கொள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தடை பிறப்பித்திருந்தது. கொ ரோனா சென்றாலும் இந்த தடையை பற்றி ஐசிசி உட்பட யாரும் கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில், பந்துகளில் உமிழ் நீரை தடவிக்கொள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் சீசனிலிருந்து பந்தில் உமிழ்நீர் தொட்டு தேய்த்து கொள்வதற்கான அனுமதியை வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.

இம்பாக்ட் விதி நீக்கமா?

ஐபிஎல் போட்டிகளில் இம்பாக்ட் பிளேயர் (Impact player) என்ற விதி உள்ளது. இந்த விதி ஒரு அணியின் வழக்கமான 11 வீரர்களுடன் கூடுதலாக 5 வீரர்களை மாற்று வீரர்களாக அறிவித்து, தேவைப்பட்டால் ஆட்டத்தின்போது ஒரு வீரரை மாற்றிக் கொள்ளலாம். அதாவது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த வீரரை பெஞ்சில் அமர வைத்து, அவருக்கு பதிலாக இரண்டாவது இன்னிங்சில் ஒரு பந்துவீச்சாளரை களமிறக்கலாம். இந்நிலையில், இந்த இம்பாக்ட் பிளேயர் விதியை நடப்பாண்டு ஐபிஎல் சீசன் முதல் நீக்க, ஐபிஎல் கேப்டன்களின் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் இம்பாக்ட் பிளேயர் விதி 2023ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.