அண்ணா பல்கலைக்கழகத்தை பாஜக அரசுக்கு தாரை வார்க்கும் முயற்சியை அதிமுக அரசு கைவிட வேண்டும். பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவைக் கைவிட வேண்டும். மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கக்கூடாது. மத்திய அரசுக்கு துணை போகும் துணைவேந்தர் சூரப்பாவை தமிழக அரசு பதவிநீக்கம் செய்யவேண்டுமென வலியுறுத்தி மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை அருகில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.வேல்தேவா, புறநகர் மாவட்டச் செயலாளர் கா.பிருந்தா, மாநகர் மாவட்டத் தலைவர்கள் க.பாலமுருகன், க.ராகுல், பா.சுபாஷ், மற்றும் எம்.மனோஜ், அழகுமலைகண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்னடர்.