tamilnadu

சென்னை துறைமுக கழகத்தில் இந்திய கப்பல் உலா பேச்சுவார்த்தை மாநாடு

சென்னை துறைமுக கழகத்தில் இந்திய கப்பல் உலா  பேச்சுவார்த்தை மாநாடு

சென்னை, ஜூன் 29 - தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்திய கப்பல் உலா (கப்பல் பயணம்) பேச்சுவார்த்தை 2025 மாநாடு சென்னையில் ஞாயிறன்று தொடங்கியது. கப்பல் பயணம், சுற்றுலா, போக்குவரத்து தொடர்பான 4 நாட்கள் மாநாடு சென்னை துறைமுக அலுவலக கட்டிடத்தில் நடைபெறுகிறது. ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறையின் கப்பல் பயணம் மிஷன் செயலகத்தின் சார்பில் நடைபெறும் மாநாட்டில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் உறுப்பினர்கள், கப்பல் இயக்குநர்கள், மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் ஒன்றிய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர், தமிழக துறைமுகங்கள் துறை அமைச்சர், வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். கப்பல் பயணம், துறைமுக செயல்பாடுகள் குறித்து கருத்து பரிமாற்றம், ஆய்வரங்கம், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும் என்று துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.