மீண்டும் சுனில் சேத்ரி கொண்டாட்டத்தில் இந்திய கால்பந்து உலகம்
அணிக்காக விளையாட உள்ளார். மார்ச் மாத இறுதியில் மாலத்தீவு மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேச போட்டிகளில் சுனில் சேத்ரி களமிறங்குகிறார். சர்வதேச அளவில் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ள சுனில் சேத்ரி, இந்திய கால்பந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (151 போட்டிகள்) மற்றும் அதிக கோல்கள் (94 கோல்கள்) பதிவு செய்த வீரர் என்ற பெருமையை நீண்ட காலம்வைத்துள்ளார்.
எனது ஓய்வு முடிவு உடல் சார்ந்தது அல்ல
மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவது குறித்து சுனில் சேத்ரி கூறுகையில்,”எனது ஓய்வு முடிவு உடல் சார்ந்தது அல்ல. நான் இன்னும் பிட்டாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன், பந்தை சேஸ் செய்கிறேன், டிபென்ட் செய்கிறேன். கடினமாக உழைப்பது எனக்கு சிக்கல் அல்ல. ஓய்வுக்கான காரணம் மன ரீதியானது” என அவர் கூறினார். சுனில் சேத்ரி ஓய்வு அறிவித்தப் பிறகு இந்தியாவில் நடைபெற்று வரும் கிளப் தொடரான ஐஎஸ்எல் (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து தொடரில் பெங்களூரு எப்சி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான நிலையில் இந்திய கால்பந்து : ஐ.எம்.விஜயன்
இந்திய அணியின் பார்வையில் இருந்து பார்த்தால் இது நல்ல முடிவாக இருக்கும். ஆனால் 40 வயதாகும் ஒருவரை தேசிய அணிக்கு விளையாட வைப்பது குறித்து என்னைக் கேட்டால் இது நல்லதல்ல என்று கூறுவேன். இதுமாதிரி கடந்த காலங்களிலும் நடந்துள்ளது. இந்திய அணிக்காக நல்ல முன்கள வீரர்களை தேடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமக்கு யாரும் இதுவரை கிடைப்பதில்லை. ஐஎஸ்எல் தொடரில் டாப் ஸ்டிரைக்கர்கள் (முன்கள வீரர்கள்) எல்லாம் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் சுனில் சேத்ரியை மீண்டும் விளையாட வைக்கிறோம். இதன்மூலம் மோசமான நிலையில் இந்திய கால்பந்து உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது” என அவர் கூறினார்.
ஜியோ ஹாட் ஸ்டாரில் அதிக விளம்பரம் : ரசிகர்கள் கடும் கண்டனம்
ஸ்டார் குழுமத்தின் ஓடிடி பிரிவான டிஸ்னி ஹாட் ஸ்டாருடன் தொழில்நுட்பம் மற்றும் சந்தா ரீதியாக போட்டி போட முடியா மல் திணறிய அம்பானி, ஹாட் ஸ்டா ரின் முக்கிய பங்குகளை விலைக்கு வாங்கினார். அதாவது ஹாட் ஸ்டாரை, ஜியோ சினிமா உடன் இணைத்து ஜியோ ஹாட் ஸ்டார் என மாற்றி தன் வசப்படுத்தினார். முன்பு ஹாட் ஸ்டார் கவனித்து வந்த திரைப்பட பிரிவுகள், சீரியல்கள், வெப் தொடர்கள், விளையாட்டு நேரடி ஒளி பரப்பு அனைத்தும் பிரதமர் மோடி யின் நெருங்கிய நண்பரான அம்பானி கைக்குச் சென்றுவிட்டது. தற்போது நடைபெற்று வரும் மினி உலகக்கோப்பை தொடரையும் ஜியோ ஹாட் ஸ்டார் தான் ஒளிபரப்பி வரு கிறது. ஆனால் முன்பு ஹாட் ஸ்டார் நிறுவனம் நடைமுறையில் வைத்து இருந்த விளம்பர கொள்கையை அம்பானி நீக்கியுள்ளார். கிரிக்கெட் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் போது ஹாட் ஸ்டார், ஸ்டார் குழு மத்தின் கையில் இருந்த போது 2 ஓவர் களுக்கு ஒருமுறை தான் விளம்பரம் ஒளி ப்பரப்பு செய்யப்பட்டது. ஆனால் அம்பானி கையில் ஹாட் ஸ்டார் வந்த பின்பு மினி உலகக்கோப்பையின் ஒவ் வொரு ஓவருக்கும் இடையே விளம் பரம் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இது எரிச்சலை தருவதாக ஹாட் ஸ்டார் வாடிக்கையாளர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.