tamilnadu

img

மனாஸ் பகுதியில் புலிகள் அதிகரிப்பு

உலகப் புலிகள் தினம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஜூலை 29 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தேசிய புலிகள்  பாதுகாப்பு ஆணையம், மனாஸ் பகுதியில் கேமரா மூலம் பெறப் பட்ட மதிப்பீட்டின்படி, புலிகள் வாழ்விடப் பகுதியில் 52 வயது வந்த புலிகள் மற்றும் எட்டுக் குட்டிகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மனாஸ் வனவிலங்கு சரணா லயம் வடகிழக்கு இந்தியாவில் அசாம் மாநிலத்தில் உள்ளது. மனாஸ் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்ற  இடம். கிட்டத்தட்ட 39,100 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தச் சரணாலயம் மனாஸ் ஆற்றைக் கடந்து வடக்கே பூட்டான்  நாட்டின் காடுகளால் சூழப்பட்டுள் ளது. இந்தியாவில் மனாஸ் வன விலங்கு சரணாலயத்தின் மொத்தப் பரப்பு 283,700 ஹெக்டேர். மனாஸில் உள்ள புலிகளின் எண் ணிக்கையை 2021- ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால் சிறிது அதிகரித்துள்ளது.

(எட்டு பெரிய புலிகள், நான்கு குட்டி கள்) என்று போடோலாந்து பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி பிரமோத் போரோ கூறியுள்ளார். 2021- ஆம் ஆண்டில் கண்டறி யப்பட்ட 29 புலிகளுடன் தற்போது  23 புலிகள் புதிதாகச்சேர்ந்துள்ளன. மொத்தமுள்ள 52 புலிகளில் 27 புலி களின் பாலினம் மிகத் துல்லியமாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது எட்டு ஆண் புலிகள், 19 பெண் புலிகள் உள்ளன. புலிகள் கணக்கீட்டிற்காக மனாஸ் புலிகள் சரணாலய அதி காரிகள், “நேச்சர்-இந்தியாவுக்கான உலகளாவிய நிதியம், இந்திய வன விலங்கு அறக்கட்டளை, ஆரண்யக் ஆகியவற்றின் துணையுடன் 381 கேமரா பொருத்தப்பட்ட கண்கா ணிப்பு நிலையங்களை அமைத்து உள்ளனர். தவிர மனாஸ் புலிகள் காப்ப கத்தில் கண்டறியப்பட்ட மற்ற உயி ரினங்கள் குறித்த தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. மனாஸில் 3,220 (Hog Deer)பன்றி மான்கள், 2,613 யானைகள், 1,656 காட்டு எருமைகள் மற்றும் 804 கடமான்கள் (மிளா மான்கள்) உள்ளன. பன்றி மான் என்பது பாகிஸ்தான், வட இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியாவின் கங்கை சமவெளியைச் சேர்ந்த ஒரு சிறிய வகை மான் ஆகும். பன்றி மான்கள் மற்ற மான்களைப் போல் குதித்துக் குதித்து செல்லாது. பன்றி போன்று தலையைத் தாழ்வாகத் தொங்கவிட்டு ஓடும் என்பதால் இது  பன்றி மான் என்று அழைக்கப்படு கிறது. மனாஸ் புலிகள் காப்பகம் பூட்டா னில் உள்ள 1,000 சதுர கிமீ ராயல் மனாஸ் தேசியப் பூங்காவுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.