சென்னை, ஏப்.28- பதிவுத்துறையில் கடந்த ஆண்டைக்காட்டில் ரூ.3,271 கோடி கூடுதலாக வருவாய் கிடைத் திருக்கிறது என்று பத்தி ரவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருக் கிறார். தமிழக சட்டப்பேரவையில் வியா ழனன்று (ஏப்.28) பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானி யக் கோரிக்கைகள் மீதான விவாதங் கள் நடைபெற்றது. முன்னதாக, அமைச்சர் பி. மூர்த்தி கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்து பேசினார். அரசு கருவூலத்திற்கு அதிக வரு வாய் பங்களிப்பு செய்யும் துறைக ளில் பதிவுத்துறையும் ஒன்றாக உள்ளது. 2021-2022 நிதியாண்டில் இத்துறையின் மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.13 ஆயிரத்தி 913 கோடியே 65 லட்சமாகும். இது பதிவுத்துறையில் இதுவரை ஈட்டப் படாத மிக அதிக அளவிலான வரு வாயாகும். மேலும், இத்தொகை யானது முந்தைய 2020-2021 நிதியாண்டில் ஈட்டப் பட்ட வருவாயை விட ரூ.3,270.57 கோடி அதிகமாகும். 2020-21 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ரூ.26, 95,650 ஆக உள்ள நிலையில், 2021-22 ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை 11.22 விழுக்காடாக உயர்ந்து ரூ.29,98,048 ஆக பதிவா னது. 2021-2022 நிதியாண்டில் திரு மணப்பதிவு மூலம் ரூ.3.80 கோடி, சங்கங்கள் பதிவு ரூ.9.98 கோடி, சீட்டு பதிவு ரூ.14.46 கோடிஇதர கட்டணங் கள் (பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் குறுந்தகடுகள் உள்பட) ரூ.18.54 கோடி, பங்குச் சந்தை ஆவணங்கள் மற்றும் காப்பீட்டுத் திட்ட ஆவணங்கள் ரூ.366.60 கோடி என மொத்தம் ரூ.413.38 கோடி ஈட்டி யுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.