சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர், கடலூர், திருச்சி மாவட்டங்களில் சீரமைக்கப்பட்ட பெரியார் நினைவு மூன்று சமத்துவப்புரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடலூர், திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களையும் அவர் திறந்து வைத்தார்.