மதுரை-மேலூர் நான்கு வழிச்சாலையில் சூரக்குண்டு முனிகோவில் அருகே ரூ.13.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சனிக்கிழமையன்று திறந்து வைத்தார். நிகழ்வில், அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி தலைவர் குமரன், சூரக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலச்சந்தர், வேலவன், மேலூர் நகர் வர்த்தக சங்க தலைவர் முத்துகிருஷ்ணன், சூரக்குண்டு, கல்லம்பட்டி கிராம பொதுமக்கள், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், எஸ்.பி.மணவாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.