tamilnadu

img

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் நினைவு அரசியல் தத்துவார்த்த பயிற்சிப் பள்ளி துவக்கம்

அருப்புக்கோட்டை, ஜூன் 6- விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மறைந்த மகத்தான  தலைவர் எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமன் நினைவாக அரசியல் தத்து வார்த்த பயிற்சி பள்ளி தொடக்க விழா  ஜுன் 5 திங்களன்று மாலை நடை பெற்றது. வெள்ளக்கோட்டையில்  நடை பெற்ற இந்நிகழ்விற்கு கட்சியின் நகர்  செயலாளர் எஸ்.காத்தமுத்து தலைமை  வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.அன்புச்செல்வன், பேராசிரியர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை வரவேற்புரையாற்றினார். செங்கொடியை மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி ஏற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் சேவியர் தொடக்க உரை யாற்றினார். பள்ளியின் நோக்கம் குறித்து மாநில கல்விக்குழு சார்பில் இரா.சிந்தன் கருத்துரையாற்றினார்.  பள்ளியை கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராம லிங்கம் திறந்து வைத்தார். 

புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த 

அப்போது  அவர் பேசியதாவது : உலகில் இரு தத்துவங்கள் உள்ளன. ஒன்று சுரண்டலுக்கு உதவுவது. மற்றொன்று சுரண்டலை எதிர்ப்பது. இந்த பிறவியில் கஷ்டப் பட்டால், அடுத்த பிறவியில் நன்றாக  வாழலாம், இறந்த பின்பு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்  என   சனாதனவாதி கள் உழைக்கும் மக்களை நம்ப வைக்கின்றனர். ஆனால், வாழ்கின்ற காலத்திலேயே  சொர்க்கத்தை காண முடியும் என மார்க்சியம் கூறுகிறது.  இந்த உலகில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக  வள்ள லார் அணையா அடுப்பை அமைத்தார். இந்த உலகில் தர்மம் உள்ளவரை இந்த அடுப்பு எரியும் என தெரிவித்தார்.  எனவே, அவரது இரு நூற்றாண்டு விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைவது போன்ற புராணக் காட்சி யை மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு  வைத்துள்ளது. மேலும் சாணக்கியனின் உருவப் படத்தை  வைத்துள்ளனர். பழைய புராணங் களை முலாம் பூசி மக்களிடம் சேர்க்கும் வேலைகளை செய்து வருகின்றனர். இருப்பதை சமமாக அனைவருக் கும் வழங்குவது தான் சோசலிசம். அத்தகைய ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாம் போராடி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். மூத்த தோழர்கள் என்.ரேணுகா தேவி, வி.சுப்புராஜ் ஆகியோரை மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன் ஆகியோர் கௌரவித்தனர்.  தமிழ்செல்வராஜ் நன்றி கூறினார். நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச்சாமி, பி.என். தேவா, வி.முருகன்,  அ.விஜய முருகன், எல்.முருகன், எஸ்.லட்சுமி,  கே.முருகன்  உட்பட பலர் பங்கேற்ற னர்.