சென்னை, செப். 23- நாமக்கல் அருகே சிவியாம்பாளை யத்தில், தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் 12 அடி உயர வெண்கல உருவச் சிலையை, சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டா லின் சனிக்கிழமையன்று (செப்.23) திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளை யத்தை சேர்ந்தவர் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன். இவர் 1924-இல் பிறந்தவர். 2019 ஏப். 6-ஆம் தேதி தனது 91-ஆவது வயதில் காலமானார். அவரது நினைவாக நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில், கொண்டம்பட்டி மேடு பகுதியில், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகாரம் அறக்கட்டளை சார்பில், வெண்கல சிலை மற்றும் அறிவகம் அமைக்கும் பணி, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததை யடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சிலம்பொலியார் சிலை மற்றும் அறிவகத்தை திறந்து வைத் தும், விழா மலரை வெளியிட்டும் சிறப்புரை யாற்றினார். இந்த விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.ராஜேஷ்குமார் வரவேற்றார். பிஜிபி குழுமத் தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமை வகித் தார். தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப் பேரவை உறுப்பி னர்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி, ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகா ரம் அறக்கட்டளை சார்பில், சென்னையைச் சேர்ந்த தமிழமுதனுக்கு, இளங்கோ விருது மற்றும் ரூ. ஒரு லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.இராசேந்திரன், மறைமலை இலக்கு வனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.