நாகப்பட்டினம், செப். 27 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட பகுதி களில் 13 பள்ளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடங் களை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி கலந்து கொண்டார். கீழ்வேளூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட தலை ஞாயிறு ஒன்றியத்தில் அய்யூர், கச்சநகரம், கொளப் பாடு, கீழையூர் ஒன்றியத்தில் திருவாய்மூர், வெண்மணச் சேரி, ஈசனூர், நாகை ஒன்றி யத்தில் வடுகச்சேரி, அக லங்கண், நிர்த்தனமங்கலம், கீழ்வேளூர் ஒன்றியத்தில் கீழ்வேளூர் பேரூராட்சி, ஓர்குடி, இருக்கை, கொடி யாளத்தூர் ஆகிய ஊராட்சி களில் உள்ள பள்ளிகளுக் கான இரண்டு வகுப்பறை கொண்ட புதிய கட்டிடங் களை தமிழக முதல்வர் கா ணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் நாகப்பட்டினம் ஒன்றியம் வடுகச்சேரி ஊராட்சியில் உள்ள நடு நிலைப் பள்ளியில் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி பங்கேற்று, புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். உள்ளா ட்சி பிரதிநிதிகள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.