அறந்தாங்கியில் சிகரம் இலவச நீட் பயிற்சி வகுப்பு துவக்க விழா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சிகரம் இலவச நீட் பயிற்சி வகுப்பு ஏழாம் ஆண்டு துவக்க விழா, ஐஎம்ஏ முன்னாள் தலைவர் மருத்துவர் செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. அறந்தாங்கி கிளை இந்திய மருத்துவ கழகம், திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு இணைந்து நடத்தும் சிகரம் பயிற்சி வகுப்பு துவக்க விழா ஐஎம்ஏ அரங்கத்தில் நடைபெற்றது. திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி, பொருளாளர் முகமது முபாரக் ஆகியோர் முன்னிலையில் அறந்தாங்கி ஐஎம்ஏ தலைவர் மருத்துவர் ராமகிருஷ்ணன் இலவச நீட் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து உரையாற்றினார். திசைகள் ஒருங்கிணைப்பாளர் கபார்கான் வரவேற்றார். சிகரம் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், வேதியியல் ஆசிரியர் பிரபாகரன், இயற்பி யல் ஆசிரியர் சரவணன், தாவரவியல் ஆசிரி யர் முருகையன், கணிதப்பட்டதாரி ஆசிரி யர் மேகலா, இயற்பியல் ஆசிரியர் செல்வ ராமசாமி, ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 45 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் வகுப்பிற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து 50 அரசு பள்ளி மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கப் பொருளாளர் முனைவர் முபாரக் அலி, சத்குருநாதன் உள்ளிட்ட திசைகள் அமைப்பின் உறுப்பினர்கள், புகைப்படக் கலைஞர் பாலா, அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஆன்டோ பிரவின் நன்றி கூறினார்.