தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் நிலம் உள்ள நலிவுற்ற மக்கள் தாமாக தனி வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி களில் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரிய திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகள் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். விளையாட்டு திடல் சென்னை அருகே பெரும்பாக்கம் அடுக் குமாடி குடியிருப்பு பகுதியில் ரூ.1 கோடி யில் தொழிற் பயிற்சி கூடம் அமைக்கப்படும். அதேபோல், நாவலூர் திட்டப்பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்படும்.