சின்னாளபட்டி,அக்.1- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத் திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சண்முகம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயமாலு முன்னிலை வகித்தார். நீர்வழித்தடத்தில் அமைக்கப் பட்டுள்ள குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் புதிதாக கட்டி வரும் பேருந்து நிலையத்திற்கு நிலத்தை தானமாக வழங்கிய திருமலைசாமி ரெட்டியார் பெயர் சூட்ட வேண்டும் என கன்னிவாடி கவுன்சில் கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 1 ஆவது வார்டு பெண் கவுன்சிலர் மணி மாலதி பேசுகை யில், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படு கிறதே தவிர எந்த ஒரு பணிகளையும் செய்வதில்லை. மாதாந்திர வரவு-செலவு கணக்கை கூட்டத்தில் ஏன் முன் வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இக்கூட்டத்தில் தலைமை எழுத்தர் முத்துராமன் உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.