tamilnadu

img

தென்மாவட்டங்களில்  21,388 பேர் பாதிப்பு; 333 பேர் பலி

மதுரை:
மதுரை உள்ளிட்ட ஆறு தென்மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. குறிப்பாக துணை முதல்வரின் மாவட்டமானதேனி, பால்வளத்துறை அமைச்சரின் மாவட்டமான விருதுநகர், கூட்டுறவுத்துறை அமைச்சர், வருவாய் அமைச்சர் மாவட்டங்களான மதுரை ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமைகாலை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் மதுரை-8,517, திண்டுக்கல்-1,725, இராமநாதபுரம்-2,603, சிவகங்கை-1,687, தேனி-2,732, விருதுநகர்-3,924 என மொத்தம் 21,388 பேர் உள்ளனர்.புதன்கிழமை காலை நிலவரப்படி மொத்தம் 9,162 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட வாரியாக மதுரை-3,280, திண்டுக்கல்-841, இராமநாதபுரம்-750, சிவகங்கை-881, தேனி-1,231, விருதுநகர்-2,186 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பை பொறுத்தமட்டில் மதுரை-167, திண்டுக்கல்-22, இராமநாதபுரம்-52, சிவகங்கை-28, தேனி-36, விருதுநகர்-28 என மொத்தம் 333 பேர் பலியாகியுள்ளனர்.

;