தருமபுரி, ஜூலை 11 - ஒன்றிய அரசு என்பது, விருப்பு - வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும்; ஆனால், தமிழ்நாட்டில் தொடர் தோல்விக்குப் பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்வதாக இல்லை என தமிழ்நாடு முதலமைச்சர் குற்றம் சாட்டினார். தருமபுரி மாவட்டத்தில் நடை பெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முத லமைச்சர் பங்கேற்று, ஊரகப் பகுதி களில் “மக்களுடன் முதல்வர்” திட்ட த்தை துவக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியது வருமாறு: “’மக்களிடம் செல் - மக்களைப் பற்றி அறிந்து கொள் - மக்களுக்காகச் செயல்படு!’ இதுதான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலை ஞரும் எங்களுக்கு சொன்னது! இது தான், அவர்கள் எங்களுக்கு அமைத்துக் கொடுத்த பாதை! வழிகாட்டு நெறி முறை! அந்த அடிப்படையில்தான், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கான திட்டங்களைச் செயல் படுத்திக் கொண்டிருக்கிறோம்! அதன் பலனை மக்கள் எனக்கு எழுதும் கடி தங்கள் மூலமாக, நேரடியாக அவர் களைச் சந்தித்துப் பேசும் பொழுதும் நான் உணர்கிறேன். இப்படி மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால் தான், அவதூறுகள் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்குக் கெட்டப் பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்த வர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்கா மல் அனைத்து மக்களுக்குமான அர சாக நாம் செயல்பட்டு வருகிறோம்! ஆனால், இதே பெருந்தன்மையை மற்ற வர்களிடம் பார்க்க முடியவில்லை! தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை! தமிழ்நாட்டின் முக்கியக் கோரிக்கை யாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை! நல்ல குண மில்லை! பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை! தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை. ஒன்றிய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனி யாவது அவர்கள் உணர வேண்டும். மக்களுக்கு உண்மையாக இருந்து, உண்மையான வளர்ச்சியை உருவாக்குவோம்! இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை உன்னதமான சிறந்த மாநிலமாக உருவாக்கிக்காட்டுவோம்!.” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.