மதுரை, அக்.15- முதியோர் ரயில் பயணச்சலுகை யை மீண்டும் வழங்க நாடாளு மன்ற நிலைக்குழு பரிந்துரை செய் துள்ளது.இதனை அமல்படுத்தக் கோரி பிரதமருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: கொரோனா காலத்தில் 2020இல் நோய் பரவுவதை தடுப்பதற்காக முதி யோர் பயணம் செல்வதை தவிர்க்க வழிகோலும் வகையில் முதியோர் பயணச் சலுகை ரத்து செய்யப்பட் டது. இப்போது 200 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு பரவல் தடுக் கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண் டும் முதியோர் ரயில் பயணச் சலுகை யை வழங்க வேண்டும் என்று பொது மக்களும் நாடாளுமன்ற உறுப்பினர் களும் தொடர்ந்து வற்புறுத்தி வரு கின்றனர்.
ரயில்வே அமைச்சகம், இது சாத் தியம் இல்லை என்று பதில் அளித்தது. நாடாளுமன்றத்தில் என் கேள்விக்கு பதிலளிக்கும் போது, பயணிகள் போக்கு வரத்து இன்னும் பழையநிலைமைக்கு திரும்பவில்லை என்றுகாரணம் கூறப் பட்டது. ஆனால் பயணிகள் வருமானம் 2019- 20 காலகட்டத்தில் ரூ. 45 ஆயி ரம் கோடி வருமானத்தை மீண்டும் 2021 -22 இல் எட்டியுள்ளது என்று பட்ஜெட் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின் றன. எனவே இந்த காரணம் நியாயமா னது அல்ல. அத்துடன் எனது கேள்விக்கு அளித்த பதிலில் ஆறு கோடியே 18 லட்சம் பேர் 2019 -20 இல் முதியோர் பயணச் சலுகை பெற்று முன்பதிவுடன் பயணம் செய்துள்ளனர். 5 கோடியே 86 லட்சம் முதியோர் முன்பதிவின்றி பய ணம் செய்தனர். இந்த எண்ணிக்கை 2021- 22 இல் முன்பதிவு வண்டிகளில் 63 லட்சம் குறைந்துள்ளது. ஏனெனில் சலுகை இல்லாததால் முதியோர் பய ணத்தை தவிர்த்துள்ளனர். இவர்களுக்கு பயணச் சலுகை அளித்ததால் 2019 -20 ஆம் ஆண்டு 1667 கோடி ரூபாய் ரயில்வேக்கு வரு மானம் இழப்பு ஏற்பட்டதாக ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார் .12 கோடிக்கும் மேலான முதியோர் இந்த சலுகையை பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை கவனிக்கும் போது இந்த தொகை பெரிய தொகை அல்ல என் பதை உணர முடியும். அதோடு சரக்கு போக்குவரத்தில் வழங்கப்படும் சலுகை களை ஒப்பிடும்போது இது வெறும் குறைவான தொகைதான் என்பதை புரிந்து கொள்ளலாம். அத்துடன் விமான சேவையிலும் முதியோருக்கு ஒரு வகையான சலுகை அளிக்கப்படு கிறது. எனவே இந்த சலுகையை கொடுக்காமல் காலம் கடத்துவது நியாய மானது அல்ல.
இந்த நாட்டில் 14 கோடியே 43 லட்சம் முதியோர் உள்ளார்கள். இவர்களில் 12 சதமானம் பேருக்குத்தான் ஏதேனும் ஒரு வகையான சமூக பாதுகாப்பு உள்ளது. மற்றவர்கள் 88 சதமானம் பேர் தங்கள் குழந்தைகளை நம்பி வாழ்கிறார்கள். கண்ணியமான வேலை இன்றி, நிரந்தர வேலையின்றி பணவீக்கத்தாலும் பாதிக் கப்பட்டு பெற்றோரை கவனிக்க முடியாத நிலையில் நிறைய பேர் உள்ளார்கள். இந்த நிலையில் மருத்துவ வசதி களுக்காகவும் தீர்த்த யாத்திரை களுக்காகவும் முதியோர் பயணிக்க வேண்டி உள்ளார்கள். அவர்களுக்கு பயணச் சலுகை மறுப்பது நீதியல்ல. முதியோர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சில நாடுகளில் பயணம் இலவசமாக அனுமதிக்கப்படு கிறது. இந்தியாவில் ரயில்வேயில் பெண் பயணிகளுக்கு 58 வயது ஆனவர் களுக்கு 50 சத பயண சலுகையும், 60 வயதான ஆண் பயணிகளுக்கு 40 சத பயண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது. இதனை திரும்ப அளிப்பது மிகத்தேவையாகும்.
இதனால்தான் சமீபத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ரயில்வே நிலைக் குழு தனது பனி ரெண்டாவது அறிக்கையில் 14 ஆவது பரிந்துரையில் கீழ்க்கண்டவாறு கூறி யுள்ளது: “தொற்று நோயின் காரண மாக முதியோர் பயணச் சலுகை நிறுத் தப்பட்டது. இந்த கமிட்டி ரயில்வே சாதா ரண நிலைமையை மீண்டும் எட்டுவதை கணக்கில் கொண்டு இந்த சலுகையை திரும்பி வழங்க நியாயம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த சலுகையை குறைந்தபட்சம் ஸ்லீப்பர் கிளாஸ், குளிர் சாதன மூன்றடுக்கு பெட்டி ஆகிய வற்றுக்கு உடனடியாக அவசரமாக திருப்பி அளிக்க வேண்டும் என்று பரிந்து ரைக்கிறோம்.” இந்த கமிட்டியின் தலைவர் பாஜக வின் உதவித் தலைவர் ராதா மோகன் சிங் என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். இந்த பரிந்துரையை சுட்டிக்காட்டி நான் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் .அதில் இந்த சலுகையை குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லா பயணங்கள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, மூன்றாம் வகுப்பு குளிர் சாதன படுக்கை வசதி ஆகியவற்றுக்கு விரிவாக்கி பயண சலுகையை மீண்டும் வழங்கிட கோரி உள்ளேன். ரயில்வே அமைச்சகத்தையும் இது குறித்து விரைந்து முடிவெடுக்க கோரி உள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.