tamilnadu

கோகுல்ராஜ் சாதி ஆணவக்கொலை வழக்கு: சிறப்பு நீதிமன்ற தீர்ப்பிற்கு சிபிஎம் வரவேற்பு

சென்னை,மார்ச் 9- பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் சாதி ஆணவக் கொலை வழக்கில், தீரன் சின்ன மலை கவுண்டர் பேரவையின்  தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு மதுரை மாவட்ட எஸ்சி,  எஸ்டி வன்கொடுமை வழக்கு சிறப்பு நீதிமன்றம், சாகும் வரை சிறையில் இருக்கும்  விதத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இந்த ஆணவப் படு கொலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல ஜன நாயக அமைப்புகளும் வலுவான போராட்டங் களை நடத்தியது குறிப்பிடத்தக்கது. முக்கிய சாட்சிகள் உட்பட பலரும் பிறழ் சாட்சிகளாக மாறியது, வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா, வழக்கைத் திசை திருப்ப விரும்பிய ஆதிக்க சக்திகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது போன்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் ஏழாண்டு களாக வழக்கு நடந்து தற்போது இந்தத் தீர்ப்பு வெளி வந்திருக்கிறது.

கோகுல்ராஜின் குடும்பத்தினருக்கு  பாதுகாப்பு - வேலைவாய்ப்பு வழங்கிடுக!  

நீதி கிடைப்பதற்காக உறுதியாய் நின்ற கோகுல்ராஜின் தாயார் சித்ரா, விடாப்பிடி யாக உழைத்த சிறப்பு அரசு தரப்பு வழக்கறி ஞர் ப.பா.மோகன் உள்ளிட்டோர் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். இதனைத் தொடர்ந்து கோகுல்ராஜின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, கூடுதல் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தலைமறைவாக உள்ள ஒரு குற்றவாளியை துரிதமாகக் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காதலுக்கும், நட்புக்கும் சாதி மத வேறுபாடு கிடையாது, சாதி ஆதிக்க மனோபாவமே இந்த குற்றத்தைத் தூண்டியிருக்கிறது. கோகுல்ராஜின் ஆணவக்கொலை, சாதி ஆதிக்க வெறியின்  மற்றோர் ரத்த சரித்திரம் என நீதிபதி சம்பத்குமார் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. சாதிகளை உடைக்க சாதி மறுப்பு திருமணமே பரிகாரம் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியதையும்  தீர்ப்பில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். கொலை செய்த வர்களுக்கும் கோகுல்ராஜூக்கும் ஆழமான முன் விரோதம் இல்லை, ஒரு சாதிய அமைப்பின் தவறான கொள்கை மற்றும் சித்தாந்த த்தின் அடிப்படையிலேயே  இக்குற்றம் நடந்துள்ளது எனவும் நீதிபதி குறிப்பிடுகிறார்.  இந்தச் சூழலில் சாதி ஆணவக் குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தை தமிழக  அரசு உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்கிற நீண்ட கால கோரிக்கையை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது. சமூக நீதிக்கான பரந்த மேடை அமைக்க பல்வேறு  அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பு களின் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருக்கக்கூடிய பின்னணியில் இந்தக் கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.  சாதியம், மதவெறி, பெண்ணடிமைத்தனம் போன்றவை அரசியல் சாசனம் உறுதிப்படுத்தி இருக்கும் சமத்துவ விழுமியங்களுக்கு எதி ரானவை. இவற்றை எதிர்த்த வலுவான பிரச்சா ரத்தை முன்னெடுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். அத்தகைய பணியில் களத்திலும், கருத்தியல் தளத்திலும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக செயல்படும் எனத் தமிழக மக்களிடம் உறுதி கூறுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.