tamilnadu

“முறையாக பணியாற்றாவிட்டால் உடனே ராஜினாமாவாம்”-கமல்

மதுரை, மே 6-தமிழக அரசியல் தலைவர்கள் தம்மை விட சிறப்பாக நடிப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறிக்கொண்டார். திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தமது கட்சியின் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர்; அதைக்கண்டு மக்களாகிய நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள் எனக் கூறிக் கொண்ட அவர் மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மத பேதமில்லை என்றும் அன்பு, பாசம் மட்டுமே இருப்பதாகவும் கூறினார்.எங்கள் வேட்பாளர் முறையாகப் பணியாற்றா விட்டால் நானே ராஜினாமா கடிதத்தை வாங்கி உங்களிடம் கொடுப்பேன். என்னால் பணம் கொடுக்க முடியாது; நான் இந்த மக்களுக்கு கடன்பட்டிருக்கிறேன். திருப்பரங்குன்றம் தொகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதிசெய்துதரப்படும். கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படும் எனக்கூறி வாக்காளர்களிடம் “சிறப்பாக நடித்தார்” கமல்ஹாசன்.

;