தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த சக்திராவ் சார்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்தும் தவறாக பயன்படுத்தப்படுகிறது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது இட ஒதுக்கீடு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டும் கேள்விக்கு பதிலளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழகத்தில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழ் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.