சென்னை,மார்ச் 3- தமிழ்நாட்டில் மதுபான விற்பனை யை அரசே நடத்தி வருகிறது. ஒருபுறம் வருமானம் கொட்டினாலும், மறுபுறத் தில் பள்ளி-கல்லூரிகள், குடியிருப்பு, விவசாய நிலம், கோவில், தேவால யம், மசூதி, மக்கள் அதிகமாக கூடும் போக்குவரத்து, அலுவலகங்கள் அரு காமையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி கொடுக்கிறது. இதனால், பெண்களும், மாணவிகளும் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல், ஏற்கெனவே திறக்கப்பட்ட கடை களையும் மூடக்கோரி தொடர்ந்து போரா ட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின்போது காவல் துறையினர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால், பல பகுதிகளில் பெண்க ளும் தாக்குதலுக்குள்ளாகினர். பள்ளி- கல்லூரி மாணவிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று பரவலாக குரல் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த பிரச்சனை முன்னுக்கு வருகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது முதல் கட்டமாக 500 கடைகள் மூடப்பட்டன. எடப்பாடி ஆட்சியிலும் கடைகள் மூடப்பட்டன. அதேநேரத்தில், புற வாசல் வழியாக புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. முந்தைய ஆட்சியில் 1,290 கடைகள் மூடப்பட்டாலும் தற்போது 5,425 கடைகள் இயங்கி வருவதாக கூறப்படுகின்றன. இவற்றின் எண்ணிக் கையைக் குறைத்து, மறுவாழ்வு மையங்களை மு.க.ஸ்டாலின் தலைமை யிலான திமுக அரசு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வந்துள் ளன. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த ஆட்சேபனை களைப் பரிசீலித்து தகுந்த உத்தர வுகளை பிறப்பிக்காமல் எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக் குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும், திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.