“நிறைய கேமிராக்களைப் பார்த்ததும் பயமாகி விட்டது. ஏனெனில், இது தேர்தல் நேரம். மூச்சுவிடக்கூட பயமாக இருக்கிறது. இன்றைய தேதியில் யாருக்கு என்ன வியாதி வரும் என்பதை கணிக்கவே முடியவில்லை. அந்தளவுக்கு காற்று, தண்ணீர் என எல்லாமே மாசாகி விட்டது. குழந்தைகள் மருந்தில் கூட கலப்படம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்” என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.