tamilnadu

img

39 பள்ளி மாணவிகளுக்கு ஹிஸ்டீரியா

டேராடூன், டிச.3 - உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட் டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி யில் படிக்கும் 39 மாணவிகளுக்கு ஹிஸ்டீரியா எனப்படும் வெறிபிடிக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தகவல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நவம்பர் கடைசி வாரத்தில் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போது  6 முதல் 12 வயது நிரம்பிய  மாணவிகள் சிலர் தலை முடியைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாக கத்திக் கொண்டும் அழுது கொண்டும் வகுப்பறையிலிருந்து வெளியே ஓடுகிறார்கள். கூட்டாக இத்தனைப் பேருக்கு வெறி பிடிக்கும் நோய் ஏற்படுமா என்று கலக்கத் தோடு விசாரணை நடத்தி வருகிறது பள்ளிக் கல்வித் துறை. மாணவிகளின் பெற் றோர்களோ, ஏதோ தெய்வக் குத்தம் நேர்ந்து விட்டது எனக் கருதி கலக்கம் அடைந்துள் ளனர். ராமக் அரசுப் பள்ளியில் 82 மாணவிக ளும் 69 மாணவர்களும் பயில்கிறார்கள்.

இது பற்றி பள்ளி நிர்வாகம் கூறுகையில், திடீர் திடீரென மாணவிகள் இவ்வாறு செய்கிறார்கள். ஆரம்பத்தில் தலை வலிக் கிறது என்கிறார்கள். பிறகு இவ்வாறு கத்திக்  கொண்டே ஓடுகிறார்கள். நாள்தோறும் பள்ளித் தொடங்கியதும் குறைந்தது ஐந்து மாணவிகளுக்காவது இந்த பாதிப்பு ஏற்படு கிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.  மருத்துவ அதிகாரி டாக்டர் குர்ஷரன் கவுர் தலைமையிலான குழு பள்ளி மாணவி களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறது.   சம்பாவத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கே.கே.அகர்வால் கூறுகையில், மாணவிகளுக்கு நோய்க்கான எந்த அறிகுறி யும் இல்லை.ஆனால், கிராம மக்கள் இதை தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகிவிட்ட தாகக் கூறுகின்றனர் என்றார். மனநல மருத்துவம் மற்றும் பெண்களின் மனநலத் துறையில் நிபுணரான டாக்டர் திவ்யா காய் சோப்ரா, கூறுகையில். “மாண விகள்  பொதுவாக மார்பு வலி, தலைச்சுற்றல், தலைவலி, மயக்கம், நடுக்கம் மற்றும் வலிப்பு” உள்ளிட்ட நோய்த் தாக்கத்தை அனு பவிக்கிறார்கள் என்றார்.