tamilnadu

ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது

சென்னை, மார்ச் 13- ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் என்ற பாறை எரிவாயு போன்ற நாசகரமான திட்டங்களைத் தமிழ கத்தின் மீது ஒன்றிய அரசு திணித்துவருவது கண்டனத்திற் குரியது. இந்த அபாயகரமான திட்டங்களால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கை விளை விக்கும். மண்ணை மலடாக்கி, சுற்றுச்சூழலை நாசமாக்கும். இதுபோன்ற திட்டங்களை எதிர்த்து தமிழக மக்கள் போராடி வரும் நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்குக் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக தெரிவி த்துள்ளபோதும், காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழ்நாட்டில் ஹைட் ரோகார்பன் திட்டத்திற்கு பரிந்துரை செய்திருப்பது கண்டனத்திற் குரியது. எனவே, தமிழகத்தில் ஆரம்பம்  முதல் தற்போது வரை ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் வாயு போன்ற திட்டங்களுக்கு அளிக்க ப்பட்ட அனுமதியை உடனே ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற அபாயகர மான திட்டங்களுக்கு அனுமதி மறுப்பது மட்டுமின்றி இத்திட்டங்க ளைத் தமிழகத்தில் திணிக்கும் முயற்சிகளைக் கைவிடுமாறும் ஒன்றிய அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.