tamilnadu

img

ஆயுள் காப்பீட்டுக் கழக பங்குகள் விற்பனையால் அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு?

புதுதில்லி, ஜூலை 26- ஆயுள் காப்பீட்டுக் கழ கத்தின் (எல்ஐசியின்) பங்கு களை (ஐபிஓ திட்டத்தின் மூலம்) விற்றதிலிருந்து அர சுக்கு ரூ.29516.12 கோடி ரூபாய் வருவாய் கிடைத் துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக் களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்கு களை (ஐபிஓ திட்டத்தின் மூலம்) விற்றதிலிருந்து அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத் தது என்றும், மேலும் ஐடி பிஐ (IDBI)வங்கியை ஆயுள் காப்பீட்டுக் கழகம் கையகப்  படுத்தியதன் மூலம் எதிர்  பார்க்கப்படும் பிரச்சனை கள், குறிப்பாக முகவர்களின்  ஊதியம் மற்றும் கமிஷன் மீதும் அதன் கிராமப்புற மற் றும் சமூகத் துறைகளின் கட மைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய அரசின்  நிதித்துறை இணை அமைச்  சர் டாக்டர் பகவத் கிஷன் ராவ் கராட், “ஆயுள் காப்பீட் டுக் கழகத்தின் பங்குகளை (ஐபிஓ திட்டத்தின் மூலம்) விற்றதன் மூலம் இந்திய அரசு தோராயமாக ரூ.29516. 12 கோடி ஈட்டியுள்ளது என்  றும், 2019 ஜனவரியில் ஐடி பிஐ (IDBI) வங்கியின் 51 விழுக்காடு பங்குகளை ஆயுள்  காப்பீட்டுக் கழகம் கையகப்  படுத்தியுள்ளது. ஐடிபிஐ வங்கியில் முதலீடு செய்வ தால் முகவர்களின் கமிஷன் மற்றும் ஊதியத்தின் மீதோ, கிராமப்புற மற்றும் சமூகத்  துறைகளுக்கான அதன் கட மைகள் மீதோ எந்த விளைவு களும் இல்லையென ஆயுள் காப்பீட்டுக்கழகம் தெரிவித் துள்ளது. 2022 மார்ச் 31 தேதியின படி ஐடிபிஐ வங்கியின் ‘மூல தனச் சொத்தின் தாங்கு திறன் விகிதம்’ (Capital-to-Risk  Weighted Assets Ratio -  CRAR) 19.06 விழுக்காடாகும்.  இந்த விகிதமானது, முறைப்  படுத்தும் அமைப்பான ரிசர்வ் வங்கியின் வரம்பான 11.5 விழுக்காட்டைவிட நன் றாகவே உள்ளது. மேலும் ஐடிபிஐ வங்கி 2021 மற்றும் 2022ஆம் நிதியாண்டிற்கான நிகர லாபத்தை அறிவித்துள்ள தோடு வங்கியின் மேம் படுத்தப்பட்ட மூலதன விகி தங்களுக்கும் பங்களிப்பை செய்துள்ளது. இதன் விளை வாக, தங்களது வளர்ச்சி  தேவைகளை எதிர்கொள்வ தற்குமான போதுமான மூல தனம் வங்கியில் உள்ள தென்று ஐடிபிஐ வங்கி மற்  றும் ஆயுள் காப்பீட்டுக்கழ கம் இரண்டுமே அறிவித் துள்ளன.” இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார். (ந.நி.)