தூத்துக்குடி, ஆக. 23 தூத்துக்குடி சுடலை காலனி பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை கனிமொழி எம்பி வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி 43ஆவது வார்டு பகுதிக்குட்பட்ட சுடலை காலனியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சி யின் போது அப்போதைய சிபிஎம் கவுன்சிலர் ராஜா முயற்சியில் தற்போ தைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீட்டு மனை பட்டா வழங்கி னார். பின்னர் அந்த பட்டாவானது கணினியில் ஏற்றப்படாமல் இருந்த காரணத்தினால் முறையான பட்டா பெறாமல் மக்கள் தவித்து வந்தனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன் நடவடிக்கையின் பேரில் 61 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, சார் ஆட்சியர் கெளரவ் குமார், தாசில்தார் பிரபாகரன், சிபிஎம் கவுன்சிலர் முத்து மாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.