கள்ளக்குறிச்சி, டிச.29 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தனது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக ஆள் வைத்து பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப் பட்டனர். உளுந்தூர் பேட்டையை சேர்ந்தவர் பெரி. செந்தில். இவர் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச் செயலா ளராக உள்ளார். தனது வீட்டில் மர்ம ஆசாமி பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கடந்த அக்டோபர் 24ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட தடயவியல் துறையினர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி கைரேகை பதிவுகளை பதிவு செய்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சமய்சிங் மீனா,துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.பிறகு, சிசிடிவி காட்சி களை அடிப்படையாக வைத்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்தனர். இந்த விசாரணையில், தனது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தானே ஆள் வைத்து செந்தில் பெட்ரோல் குண்டை வீசியது தெரிய வந்தது. இந்த வழக்கில் செந்தில் மற்றும் அவரது மகன் மணிகண்டன், பெட்ரோல் குண்டு வீசிய மாதவன் உள்ளிட்ட மூன்று பேரையும் உளுந் தூர்பேட்டை தனிப்படை காவலர் கள் வெள்ளியன்று (டிச.29) கைது செய்தனர்.