ஹாய் குட்டி நண்பர்களே... இன்னைக்கு நம்ம இந்தியாவுல இந்து, கிறிஸ்டியன், முஸ்லீம், சீக்கியம், புத்தம், சமணம்ன்னு எல்லா மத மக்களும் வாழ்ந்துட்டு இருக்கோம். ஆனா ஒத்துமையா வாழ்றோமா? இல்ல இல்ல... ஒத்து மையா வாழ விடுறாங்களான்னு நீங்க யோசிச்சு பாத்து இருக் கீங்களா? இந்த மதத்த வச்சு நம்மளையே ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரியா மாத்தும் வேலை தான் இங்க நடக்குது. அதுனால தான் மக்களே இந்து முஸ்லீம்ன்னு பிரிஞ்சு எதிரிகளாக மாறி மோசமான நிலையில தான், இன்னைக்கு நம்ம வளந்து வர்ற இந்தியா இருக்கு. அதாவது யானைக்கு மதம் பிடிச்சா யாரு சொல்றதையும் கேக்காம எல்லாத்தையும் அடிச்சு அழிக்கும். அந்த மாதிரி இன்னைக்கு மதம் பிடிச்ச மனிதர்கள் இருக்காங்க. நம்ம ஸ்கூல்ல கூட “வேற்றுமையில் ஒற் றமை”. எல்லாரும் சமம்ன்னு நம்ம டீச்சர் லாம் சொல்லி குடுத் தாங்க. ஆனா தினமும் வர செய்திய பாக்கும் போது மதத்தை வைத்து நடக்குற நிறைய சண் டைகள், பிரச்சனைகள் தெரியுதே ஏன்? அதுக்கு பின்னாடி நெறய கதை இருக்கு, அத தெரிஞ்சுக்குற முன்னாடி நாம எப்படி, மத்தவங்க மத நம்பிக்கைய மதிக்கணும்னு தெரிஞ்சுக்குறதுக்கு ஒரு உதாரணம் பாக்கலாம். நம்ம கொல்கத்தா ஐபிஎல் டீம் ஓனர் ஷாருக்கான் இருக்கரே, அவரு ஒரு முஸ்லீம். அவரோட மனைவி இந்து. இவங்க 2 பேருக்கும் 1991லேயே கல்யாணம் ஆச்சு. இப்ப 33 வருஷம் ஆகிடுச்சு. இப்போ வரைக்கும் அவங்க 2 பேரும் இந்து முஸ்லீம்ன்னு எந்த சண்டையும் போட்டது இல்லையாம். அது மட்டும் இல்ல, அவரோட பெண் குழந்தைய ஸ்கூல்ல சேத்தப்போ மதத்தை குறிப்பிட வேண்டிய தேவை இருந்ததால், அவங்க அப்பாகிட்ட அந்த பொண்ணு நாம எந்த மதம்ன்னு கேட்டப்போ நாம இந்தியன்னு ஷாருக்கான் எழுதி குடுத்து இருக்காரு. சரி இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆச்சு தெரியுமா? ஷாருக்கான் சாரும் அவங்க மனைவியும் ஒருத்தர் மதத்தை ஒருத்தர் மதிச்சாங்க. மதிச்சுக்கிட்டு இருக்காங்க. உன் மதம் பெருசா, என் மதம் பெரு சான்னு அவங்க சண்டை போடல. முக்கியமா ஒரு மதத்தை பத்தி பொய்யோ அவதூறோ பண்ணல. அதனால தான் அவங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்ல. அன்பு, அன்பு, காதல். அன்பு ஒரு நாளும் வேற்றுமை பார்ப்பது இல்ல. அதே மாதிரி நாமளும் நம்ம நண்பர்கள், ஆசிரியர்கள், சக மாண வர்கள், நம்ம பக்கத்து வீட்டுல, பக்கத்து தெருவுல இருக்க எல்லா ரோட மத உணர்வுகளையும் மதிக்கணும், அவமதிக்க கூடாது. அன்பைக் கொடுக்கணும் குறிப்பா எல்லாரும் எல்லாரோட மத உணர்வுகளை யும் மதிச்சு நடக்கணும். அவமதிக்கக் கூடாதுன்னும் சொல்லித் தர ணும். இப்டி இருந்தா நாம இந்தியர்களா, டீச்சர் சொல்லித் தந்த மாதிரி வேற்றுமையில் ஒற்றுமையா மதம் பிடிக்கா நண்பனா, ஆசிரியரா, பக்கத்துக்கு வீட்டுக்காரராக, ஊர்க்காரராக வாழலாம். - உங்கள் அன்பு அங்கிள்