வராக்கடனில் இந்தியாவே முதலிடம்
உலகம் முழுவதும் நிதி நிறுவனங்கள் பொது வாக, தாங்கள் வழங்கும் கடன் தொகையில் 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை மட்டுமே வராக்கடனாக இருக்கக் கூடும் என்று ஒதுக்கீடு செய்கின்றன. இதிலும் கூட, கடன் வாங்கியவர்களின் சொத்துக்களைக் கொண்டு கடனை நேர் செய்வதற்கும், கணக்கியல் இடைவெளி யைக் குறைப்பதற்கும் பிரத்யேக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேச நிதி நிறுவனம் (IMF) மேற்கூறிய அளவீடு களை அங்கீகரித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வராக்கடன் (என்பிஏ) விகிதம் 1.1 சதவீதம் முதல் 1.2 சதவீதம் என்றே உள்ளது. நிதி நிறுவனங்களை வழிநடத்தும் கட்டுப் பாட்டு அமைப்புகள் இந்த நாடுகளில் மிகுந்த செயல் திறனுடனும், கண்டிப்புடனும் இயங்கி வருகின்றன. மேலும் இந்த நாடுகளில் பொது மக்களின் விழிப்பு ணர்வு அதிகமாகவும், அரசியல் தலையீடுகள் மிகமிகக் குறைவாகவும் உள்ளன. கனடாவில் மொத்த வராக் கடன் (என்பிஏ) விகிதம் 0.4 சதமாக உள்ளது. இது முறையே தென் கொரியாவில் 0.5 சதமாகவும், சுவிட்சர்லாந்தில் 0.6 சதமாகவும் உள்ளது. சீனா கடன் பெற்றோர் விஷயத்தில் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்கிறது. அங்கு வராக் கடன் விகிதம் 1.8 சதமாக உள்ளது. பெரும்பாலான ஆசிய நாடுக ளிலும் இதே தன்மையில் என்பிஏ விகிதம் பின்பற்றப் பட்டு வருகிறது. ரஷ்யா மட்டுமே இப்பட்டியலில் விதி விலக்கு. அங்கு அண்மைக்கால பதற்றச் சூழல், கூட்டுக்களவு முதலாளித்துவ அணுகுமுறைகள் ஆகி யவை காரணமாக என்பிஏ விகிதம் 8.3 சதமாக அதி கரித்துவிட்டது. இந்தியாவோ வங்கிகளை ஏமாற்றும் விஷயத்தில் இந்த நாடுகள் அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி, என்பிஏ விகிதத்தில் முன்னணி யில் உள்ளது. குறிப்பாக மோடி ஆட்சியில் வங்கிகளின் வராக்கடன் விகிதம் தொடர்ச்சியாக, மிக வேகமாக அதிகரித்து வந்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அதிகா ரப்பூர்வ தரவுகளும், புள்ளி விவரங்களுமே இதை உறுதிப்படுத்துகின்றன.
4.1 சதவீதம் எங்கே?
12.17 சதவீதம் எங்கே?
கடந்த 31.03.2014-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2 ஆட்சி முடிவுறும் தறுவாயில் இந்தியா வில் வங்கிகளின் வராக்கடன் விகிதம் 4.1 சதமாக இருந்தது. இது, மோடி அரசு பதவியேற்ற நான்கே ஆண்டுகளில் நாலுகால் பாய்ச்சலில் வளர்ந்து, 31.03.2018-ல் 11.46 சதமாக உயர்ந்து விட்டது. இதை நிதியமைச்சரே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நிதித்துறை இணையமைச்சர் தன்னுடைய இன்னொரு பதிலில், கடந்த 7 ஆண்டுகளில் வராக் கடன் விகிதம் உச்சபட்சமாக 12.17 சதத்தைத் தொட்டி ருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், சில விளக்கங்கள் கேட்டு நான் எழுதிய கடிதத்திற்கு, நீண்ட காலமாகியும் நிதியமைச்சர் கண்டுகொள்ளாத நிலையில், நிதித்துறை இணையமைச்சரிடமிருந்து அண்மையில் பதில் வந்துள்ளது. அதில், 31.03.2022 நிலவரப்படி என்பிஏ விகிதம் 4.41 சதமாகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 31.03.2022 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத் தன்மை அறிக்கை மேற்சொன்ன 4.41 சத கூற்றை உறுதிப்படுத்தவில்லை. மேலும் இந்த அறிக்கை, செப்டம்பர் 2023-ல் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் என்பிஏ விகிதம் 9.4 சதமாக உயரும் என்றும் தனியார் வங்கிகளின் என்பிஏ விகிதம் 5.8 சதமாக அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது. அண்மைக் காலமாக என்பிஏ நிலைமையில் (வராக்கடன் வசூலிப்பில்) சிற்சில முன்னேற்றங்கள் இருப்பதாகச் சொல்வதில் ஓரளவு உண்மை உள்ள போதிலும், பிற வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலைமை இரண்டு அல்லது மூன்று மடங்கு மோசமாகவே உள்ளது என்பதை நாம் வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது. அந்த நாடுகளில் விசாரணை மற்றும் கண் காணிப்பு நடைமுறைகள் மிகவும் வலிமையாக இருந்து வருகின்றன என்பதையும், அங்கெல்லாம் மோசடியில் ஈடுபடும் மிகப்பெரும் செல்வந்தர்க ளுக்குச் சலுகைகள் வழங்கி, பாதுகாத்து அரவணைக்கும் கேடுகெட்ட போக்குகள் கிடையாது என்பதையும் இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும். அதே வேளையில், இந்தியாவின் என்பிஏ வராக்கடன் விகிதம் உலகிலேயே மிக அதிகமாக இருந்து வருவதும், கணிசமான அளவில் கடன் தொகை மீட்கப்படாமல் தள்ளுபடி செய்யப்படுவதும் “தவிர்க்க இயலாதது“ என்ற வாதம் ஒரு சிலரால் முன்வைக் கப்படுகிறது. “பணம் என்பது பறந்து கொண்டே இருப்பது, கவனக் குறைவால் பறிகொடுப்பவர்க ளிடமிருந்து, சாதுர்யமாகக் கைப்பற்றுபவர்கள் கைகளுக்குப் பணம் பாய்ந்து கொண்டே தான் இருக்கும்” என்று வினோதமான கருத்து அத்தகை யோரிடமிருந்து வெளிப்படுகிறது.
இந்தியாவை ஆட்சி செய்யும் கூட்டுக்களவு முதலாளித்துவம்
நாம் முன்னரே விவாதித்தது போல, ஒரு சில தொழில் முனைவோர் உண்மையிலேயே பெரும் இழப்புகளை எதிர்கொண்டு, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகி இருக்கக்கூடும். ஆனால் விரல்விட்டு எண்ணக் கூடிய அந்த ஒரு சிலரைத் தவிர, கணிசமான எண்ணிக்கையிலான மற்ற கடனாளிகள், தங்கள் அரசியல் எஜமானர்களின் பேராதரவோடு பெரு மளவில் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதே நடை முறை உண்மையாக உள்ளது. வங்கி சட்டங்க ளும், இதர குற்றப்பிரிவு சட்டங்களும் பெரும் செல் வந்தர்களின் விருப்பம் போல வளைந்து கொடுக்கும் தன்மையிலேயே இந்தியாவில் வடிவமைக்கப் படுகின்றன. சீனா உள்பட பிற நாடுகளில் இத்தகைய நெகிழ்வுத் தன்மை இல்லாமல் சட்டங்கள் கறாராகப் பின்பற்றப்படுவதால், அங்கெல்லாம் இவ்வாறு இழக்கப்படும் தொகை இந்தியாவுடன் ஒப்பிடுகை யில் மிகவும் சிறிய ஒரு துண்டு துக்காணி அளவு தான் என்பதையும் உணரலாம். இவ்விடத்தில் நாம் அழுத்தம் திருத்தமாகக் கூற விழைவது என்னவெனில், வங்கிகளிலிருந்து வெளியேறி மாயமாய் மறைந்து போன இந்த 12.10 லட்சம் கோடி ரூபாய், அடிப்படையில் உங்களுடைய, என்னுடைய, நம் எல்லோருடைய சேமிப்புப் பணம் மற்றும் வங்கிகள் தம் உழைப்பைச் செலுத்தி ஈட்டிய வருவாய் ஆகும். அரசு அவ்வப்போது வங்கிக ளுக்கு மறு-முதலீடு என்ற தன்மையில் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் அதுவும் பொது மக்க ளிடமிருந்து திரட்டப்படும் வரி வருமானத்திலிருந்து தரப்படுகிற ஒரு கட்டாய நன்கொடை போன்றது தான். எப்படிப் பார்த்தாலும் இதில் பாதிப்பு அடைவது பொது மக்களே!
நெஞ்சை உறைய வைக்கும் பண மோசடிகள்
பண மோசடிகள் நம் நெஞ்சையே உறைய வைக்கும் அளவுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் நாள் தோறும் நடந்தேறி வருகின்றன. ஆனால், கடன் என்ற போர்வையில் மிகவும் இழிவான முறை யில் வங்கிகளிலிருந்து பணத்தைக் கொள்ளை யடிக்கும் இந்த பெரும் செல்வந்தர்கள் மீது விசார ணையோ, நடவடிக்கையோ எடுக்க அமலாக்கத் துறை நேரம் ஒதுக்குவதில்லை. மாறாக, ஒன்றிய பிஜேபி அரசை எதிர்க்கும் அரசியல் கட்சியினரின் பணப் பரிவர்த்தனைகளைத் தோண்டி எடுத்து, அவர்க ளின் செயல்பாடுகளை முடக்குவதற்கே அமலாக்கத் துறையின் சக்தி அனைத்தும் செலவிடப்படுகின்றன. ஆகவே அது கார்ப்பரேட் கனவான்களின் பாதையில் குறுக்கிடுவதில்லை. இத்தகைய புறச்சூழல் காரண மாகவே, வானில் மேகத்தைக் கிழித்துக் கொண்டு செல்லும் விமானத்தைப் போல, அரசின் சட்ட திட்டங்கள் என்னும் மேகத்தைக் கிழித்து எறிந்து விட்டு, தாங்கள் விரும்பும் பாதையில் கார்ப்பரேட் டுகள் தங்கு தடையின்றி பயணித்துக் கொண்டி ருக்கின்றனர். ஒன்றிய அரசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிடையே பலம் வாய்ந்த உறவின் பின்னணியில், கார்ப்பரேட் செல்வந்தர்களின் வழிகாட்டுதலோடு மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளில் எந்தவொரு பணியும் இலவசமாய்க் கிட்டுவதில்லை. பரஸ்பர உதவி மற்றும் கைம்மாறு என்கிற தன்மையிலேயே அவை இடம் பெறுகின்றன. இந்தச் சூழலில், வங்கி களில் குவிந்து கிடக்கும் சேமிப்புத் தொகையை, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வசம் கையகப் படுத்திக் கொள்வது எவ்வாறேனும் தடுக்கப்பட வேண்டும். அதற்கேற்ப நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் கார்ப்பரேட்டுகளின் உத்தி, ஒரு ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. அது போன்று, பொது மக்களின் தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் நியாயங்களுக்காகக் குரல் எழுப்பும் தன்மையின் பயனாகவே, வங்கித் துறை சிதைக்கப்படுவதையும், வங்கி டெபாசிட்டுகள் சுருட்டப்படுவதையும் தடுத்து நிறுத்த முடியும். வங்கிப் பணத்தை விழுங்கிடத் துடிக்கும் கயமைத் தனத்திலிருந்து வங்கித் துறை யையும், நாட்டையும் பாதுகாக்க முடியும்.
கட்டுரையாளர் : இந்திய அரசு கலாச்சாரத் துறையின் மேனாள் செயலாளர், பிரசார் பாரதி அமைப்பின் மேனாள் தலைமை நிர்வாக அலுவலர், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்.
தி வயர் இணைய இதழிலிருந்து
தமிழாக்கம்: கடம்பவன மன்னன்