பலவிதமான நோய்கள், தனிமை, வறுமை, பாதுகாப்பி ன்மை போன்ற சூழலில் போராடி வாழ்ந்து கொண்டி ருக்கும் முதியோர்களின் நிலை மிகுந்த வேதனைக்குரியது. அன்பு, பாசம், மதிப்பு, பராமரிப்பு அனைத்தையும் இழந்து வாழும் முதியோர் எண்ணிக்கை இன்று மிக அதிகம். இது போன்ற சூழலில் வாழும் முதி யோர்களுக்கு இந்த நூல் பெரிதும் உதவியாக இருக்கும். கேள்வி பதில் மூலமாக மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து செயல்படும்படியாக மருத்துவர் இந்த நூலை எழுதியுள்ளார். குறிப்பாக -பெண்கள் ஆண்க ளை விட அதிக நாட்கள் வாழ காரணம் என்ன ? -முதுமை பருவம் முழு நிலவா? தேய்பிறையா? - வயதான காலத்தில் நோய்கள் வராமல் இருக்க சத்து மாத்திரைகள் அவசியமா? -மறதி நோய் பரம்பரையா? -வயதான காலத்தில் நெஞ்சு வலி வராமலேயே ஹார்ட் அட்டாக் வருமா? - முதுமை காதல் அவசியமா? இது போன்ற ஏராளமான கேள்வி களுக்கு விடை அளிக்கிறது இந்த நூல். வயதாகி விட்டது இனிமே இனி நோய்கள் வருவது இயல்பு என்ற எண்ணம் தேவையற்றது. நடுத்தர வயதில் இருந்தே அனைவரும் திட்ட மிட்டால் இந்த எண்ணம் ஏற்படாது. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை, தினமும் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி, சிறுதானியங் கள் அடங்கிய உணவிற்கு மாறிக் கொள்வது இவையெல்லாம் நோய் தொல்லையில் இருந்து முதுமையை எளிதில் கடக்க முடியும். அதுபோன்று தேவையான நிதி வசதி, மருத்துவ காப்பீடுகள் செய்து கொள்வது, முடிந்தவரை மகிழ்வாக இருக்க முயல்வது, அனைவரிடமும் அன்பு பாராட்டுவது இவை எல்லாம் முதுமை நமக்கு இல்லை என்ற எண்ணத்தை நமக்கு தோற்றுவிக்கும் என்பது இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
நூலாசிரியர் :
டாக்டர் வி. எஸ். நடராஜன்
விலை : ரூபாய் 150
வெளியீடு :
டாக்டர் வி. எஸ். நடராஜன்
சென்னை : 600010.
தொடர்பு எண் :
8122102173