அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் பட்ட இந்தியர்களை நாடு கடத்தும் வேலையை அமெரிக்கா துவங்கியது. கடந்த பிப்ரவரி 3 அன்று 104 இந்தி யர்களை கை-கால்களில் விலங் கிட்டு நாடு கடத்திய அமெரிக்கா, பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே, பிப்ரவரி 14 அன்று 200-க்கும் மேற்பட்ட இந்தி யர்களை நாடு கடத்தியது. இவர் கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக ளில் இந்தியா வந்து சேருவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி சனிக்கிழமையன்று 119 இந்தியர்கள், அமெரிக்க விமானப்படை விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வந்திறங்கி னர். இந்நிலையில், நாடு கடத்தப் பட்ட இந்தியர்கள் மேலும் 112 பேர் ஞாயிறன்று இரவு 10 மணியளவில் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தில் சண்டிகர் வந்திறங்கினர். வழக்கம்போல இவர்களையும் கை-கால்களில் விலங்கிட்டு, கடுமை யான அவமானத்திற்கு உள்ளாக்கி டிரம்ப் அரசு நாடு கடத்தியுள்ளது. இவர்களில் 31 பேர் பஞ்சாப், 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 2 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்கள்.