tamilnadu

img

இம்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை,மார்ச் 9- குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத  இறுதியில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்பு வதற்கான குரூப்-4 தேர்வு கடந்த  ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி  நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். தேர்வு  முடிவுகள் ஜூன் மாதம் வெளியா கும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே  அறிவித்திருந்தது.  இதற்கிடையே, அரசுப் பணி களில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்ப ரில் வெளியாகும் என்று டிஎன்பி எஸ்சி அறிவித்தது. பின்னர், அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர கால அட்டவணையில் பிப்ரவரி 2-வது வாரம் தேர்வு முடிவு கள் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், தேர்வு முடிந்து பல மாதங்களாகியும் முடிவு கள் வெளியாகவில்லை. எனவே, குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பி எஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பின ரும் வலியுறுத்தினர்.  இந்நிலையில், குரூப்-4 தேர்வு  முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப் படும் என்று கடந்த பிப்ரவரியே டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், தற்போது வரை தேர்வு முடிவு கள் வெளியாகவில்லை. இந்நிலை யில், ட்விட்டரில் குரூப் 4 தேர்வு  முடிவுகளை உடனே வெளியிடக் கோரி ஹேஷ்டேக் ட்விட்டரில்  ட்ரெண்டானது. இதன் எதிரொலி யாக, குரூப் 4 தேர்வு முடிவுகள்  மார்ச் இறுதியில் வெளியாகும் என்று  டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட்ட விரிவான செய்திக் குறிப்பின்படி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.