2022ஜுன் 29 அன்று தனது 60ஆம் ஆண்டில் (வைரவிழா ஆண்டு) அடியெடுத்து வைக்கிற தீக்கதிர் தமிழ் நாளிதழுக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 60 ஆண்டு காலமாக புரட்சியின் நோக்கத்திற்கும், புரட்சிகர இயக்கத்திற்கும் தீக்கதிர் இடைவிடாத சேவையினை ஆற்றி வந்திருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்ற தனது நூலில் தோழர் லெனின், “ஒரு செய்தித் தாள் கூட்டுப் பிரச்சாரகர் மட்டுமல்ல; ஒரு கூட்டுப் போராளி மட்டுமல்ல; அது கூட்டாகச் செயல்படும் ஓர் அமைப்பாளரும் கூட” என்று எழுதினார்.
மதுரையில் அமைந்துள்ள தீக்கதிர் நாளிதழின் தலைமை அலுவலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்புவிழாவுடன் வைரவிழா கொண்டாட்டங்கள் துவங்குவதை அறிந்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதையொட்டி ஓராண்டு முழுவதும் நடைபெற உள்ள நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிபெற வேண்டும் என நான் விரும்புகிறேன்; இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தீக்கதிர் நாளிதழின் விநியோகமும், வாசகப் பரப்பும் பெருமளவுக்கு விரிவடையும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.
புரட்சிகர வாழ்த்துக்கள்.