தஞ்சாவூர், அக்.27- மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையான கடல் வளத்தை புதுப்பிக்கவும், இறால் உற்பத்தியை அதிகரிக்கவும் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. இதையொட்டி வியாழனன்று, பாக் ஜலசந்தி கடற்பகுதியான, தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் 3.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், கடற்பகுதியில் விடப்பட்டன. இதில், மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் எம்.சிவ குமார், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றி யப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஓம்கார் பவுண்டேஷன் முனைவர் பாலாஜி, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் ஜி.தமிழ்மணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திட்டம் துவங்கியதிலிருந்து (பிப்ரவரி, 2022), இதுவரை 22.64 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னர் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன.