சென்னை, அக். 16 - கோவில் நிலங்களில் குடி யிருக்கும், குத்தகை விவசாயம் செய்வோருக்கு, அறநிலையத்துறை சட்டப்படி பட்டா வழங்க கோரி திங்களன்று (அக்.16) மாநிலம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் களுக்கு சொந்தமான இடங்களில் வீடு கட்டி குடியிருப்போர், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறு கடை வைத்திருப்போருக்கு வாடகை மற்றும் குத்தகை பல மடங்கு உயர்த்தி, முன்தேதியிட்டு செலுத்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அந்த தொகையை 15 நாட்களில் செலுத்த வில்லை என்றால் வெளியேற்று கின்றனர். இதையடுத்து நடைபெற்ற போராட்டங்களையடுத்து, மாநில அரசு, வாடகை நிர்ணய குழு மூலம் மறுபரிசீலனை செய்து தொகை மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தது. அதில் எந்த முன்னேற்ற மும் ஏற்படவில்லை.
இந்நிலையில், புதிதாக வாடகை நிர்ணயம் செய்ய தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை வெளியிட வேண்டும். அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் தலை முறை, தலைமுறையாக வீடு கட்டி குடியிருந்து வரும், குத்தகை விவசாயம் செய்து வருபவர்களுக்கு சட்டப்பிரிவு-34ன் படி பட்டா வழங்க வேண்டும். வாரிசுதாரர் பெயர் மாற்றம் செய்ய அலைக்கழிக்க கூடாது, விவசாய நிலம் மறு ஏலம் என்ற பெயரில் விவசாயிகளை வெளியேற்றுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலி யுறுத்தி மாநிலம் முழுவதும் 16 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு அடிமனை பயனாளி கள், குத்தகை விவசாயிகள் பாது காப்பு சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக சென்னை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் மு.நடராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், சங்கத்தின் மாநிலத் தலைவர் வ.செல்வம், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் கே.முருகன், பொருளாளர் வி.செந்தில்குமார், துணைத்தலைவர் எஸ். கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். மயிலாடுதுறையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் பொதுச் செயலாளர் சாமி.நாட ராஜன் கலந்து கொண்டார். அதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் நடந்த போராட்டங்களில் மாநில, மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.