tamilnadu

img

திருவாரூர், குடவாசல் அரசு கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா

திருவாரூர், குடவாசல் அரசு கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மற்றும் குட வாசல் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவாரூர் திருவிக கல்லூரியில் நடைபெற்ற விழா விற்கு கல்லூரி முதல்வர் பி. ராஜாராமன் தலைமை வகித்தார். கல்லூரி கல்வி இணை இயக்குநர் ரோஸி, சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவ, மாணவிகள் 1,131 பேருக்கு பட்டங் களை வழங்கி சிறப்புரையாற்றினார். இளநிலையில் 857 மாணவர்களும், முதுநிலையில் 267 மாணவர்களும், ஆய்வியல் நிறைஞரில் 7 மாணவர்களும் என  மொத்தம் 1,131 பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் இளநிலையில் 15 பேரும், முதுநிலையில் 28 பேரும்  பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், குடவாசல் அரசு கலை அறிவியல் கல்லூரி யில் 5-ஆவது பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் பங்கேற்று மாண வர்களுக்கு பட்டமளித்து உரையாற்றினார். விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா. பசுபதி  தலைமை வகித்தார். பட்டமளிப்பு விழாவில் 170 மாணவர் களுக்கு பட்டமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.