tamilnadu

img

கேரளத்தில் புதிதாக 506 பேருக்கு கோவிட் தொடர்பு தொற்று 375; குணமடைந்தது 794 பேர்

திருவனந்தபுரம், ஜூலை 31- கேரளத்தில் வியாழனன்று 506 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 375 பேருக்கு தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றிடம் தெரியாத நோயாளிகள் 29 பேர். குணமடைந்தோர் 794 பேர் என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். வியாழனன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: வியாழனன்று கோவிட் உறுதி செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 31 பேர். வெளி மாநிலங்க ளில் இருந்து வந்தோர் 40 பேர். சுகாதார ஊழி யர்கள் 37 பேர். ஐசிஎம்ஆர் இணையதளத்துடன் தொடர்புடைய சில தொழில்நுட்ப வேலைகள் நடப்பதால் மதியம் வரையிலான கணக்குகள் இவை. கோவிட் மூலம் வியாழனன்று இரண்டு உயிரி ழப்புகள் ஏற்பட்டன. கோழிக்கோடு பள்ளிக்கண்டி யைச் சேர்ந்த ஆலிக்கோயா (77), எர்ணாகுளம் வாழக்குளத்தைச் சேர்ந்த பீபாத்து (65) ஆகி யோர் உயிரிழந்தவர்கள். வியாழன் காலை வரை யிலான 24 மணி  நேரத்தில் 21,533 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன என்று முதல்வர் தெரிவித்தார்.