சென்னை, ஏப்.22- தமிழ்நாடு சட்டப்பேரவையில் தோழமை மற்றும் இடதுசாரிக் கட்சி களின் எதிர்ப்புகளையும் மீறி 12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறை வேற்றப்பட்டது. திமுக அரசின் இந்த நடவடிக் கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. மேலும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர் களும், தொழிற் சங்கத் தலைவர் களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த னர். தொழிலாளர் கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிலை யில் இது தொடர்பாக வரும் 24 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொழிற்சங் கங்களுடன் தமிழ் நாடு அரசு ஆலோ சனை நடத்த உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- கடந்த வெள்ளிக்கிழமை ஏப்.21 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் “2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண். 8/2023)” தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டமுன்வடிவின் முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்து தற் போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்தி ருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறு பட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறி,
இந்தத் திருத்தத்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சட்டமன்றத்தில் தொழி லாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட் டுத்துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் விரிவாக விளக்கம் அளித்தார்கள். இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து வருவ தால் வரும் ஏப்.24 அன்று மதியம் 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டிலுள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப் படவுள்ளது”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.