tamilnadu

img

செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி

செவித்திறன் குறையுடையோருக்கான  அரசுப் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி'

புதுக்கோட்டை, மே 20-  புதுக்கோட்டையில் இயங்கிவரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற 10 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு நேரில் சென்று, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களையும் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் மு.அருணா இனிப்பு வழங்கி பாராட்டினார். மேலும், ரூ.80,000 மதிப்பிலான காதொலிக் கருவிகளும் மாணாக்கர்களுக்கு வழங்கியதோடு, அன்னையர் தினத்தை முன்னிட்டு மாணாக்கர்களின் தாய்மார்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆட்சியர் கவுரவித்தார்.  இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், புதுக்கோட்டை வட்டாட்சியர் மு. செந்தில்நாயகி, முடநீக்கியியல் வல்லுநர் ச.ஜெகன் முருகன், பள்ளித் தலைமையாசிரியர் வே.அன்னாள் ஜெயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.