tamilnadu

img

மதுரையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 3- அரசு பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கொரோனா  கால பேரிடர் நிதி யாக ரூபாய் 7,500  மக்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணியில் உயிரிழந்த அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். பொதுத்துறைகளான ரயில்வே இன்சூரன்ஸ் மற்றும் வங்கி போன்றவைகளை தனியா ருக்கு தாரை வார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் க.நீதிராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலப்பொதுச்செயலாளர் ஆ.செல்வம் சிறப்புறையாற்றினார், ஜக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாச கன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ், பரமசிவன், ஞானபிரகாசம், சோலையப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். இராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பாக இராமநாதபுரம் ஊராட்சி அலுவலம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆ. ரா சேந்திரன், அப்துல் ஜப்பார், விஜயகுமார், சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். கடலாடியில் நடைபெற்ற போராட்டத்தில் சிவனுபூவன்,  உலகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்