தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவல் பிரிவு தொடங்கப்பட்டதன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு “ சென்னை - கோடியக்கரை- சென்னை” பாய்மரப் படகு பயணத்தை சென்னை துறைமுகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.