அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் பொன்விழா ஆண்டு கருத்தரங்கம் ஞாயிறன்று (செப்.10) சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன தலைவர் கே.ஆறுமுகநயினார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொன்விழா மலரை சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி பெற்றுக் கொண்டார். உடன் அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன அகில இந்திய பொதுச்செயலாளர் ஆர்.லட்சுமய்யா, மாநில பொதுச்செயலாளர் வி.குப்புசாமி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.