இந்தியா விடுதலையடைந்து முக்கால் நூற்றாண்டை (75 ஆண்டுகள்) கடந்து விட்டது. இந்தியாவின் அரசியல் சாசனம் மாமேதை அம்பேத்கர் தலைமையிலான குழு வால் தயாரிக்கப்பட்டு 1950இல் நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது. இதன் ஒரு பகுதி யாக தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப் பட்டு விட்டதாக அப்போதே அறிவிக்கப்பட்டது. இதனால் அக்காலத்தில் வாழ்ந்த சமூக சீர்திருத்த ஆர்வலர்களும், ஜனநாயக சக்தி களும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக அமலில் இருந்த சமூக இழிவுகள் இனி நடை பெறாது என நம்பினார்கள். ஆனால், அவர் களின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் தகர்ந்து போயின என்பது தான் உண்மை. ஆம்!. இந்திய அரசியல் சாசனத்தாலோ அதன் கீழ் நிறைவேற்றப்பட்ட தீண்டாமை ஒழிப்பு சட்டங்களினாலோ தீண்டாமைக் கொடுமை கள் ஒழிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல; அவை புதிய அவதாரம் எடுத்து, பழைய வடிவங்களோடும் சேர்ந்து சமூகத்தில் தலை விரித்தாடுகின்றன. இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பாகமாக உள்ள 28 கோடி தலித் மக்கள் இன்றும் அனுபவிக்கும் அவமானங்களும், வேதனை களும் கொஞ்சநஞ்சமல்ல. சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் சாதிய சக்திகள் மலத்தை கலந்து விட்டார்கள் என்ற செய்தி நம் நாட்டையே உலுக்கியது. தமிழ்நாடு சமூக சீர்திருத்த இயக்கம் வலுவாக நடந்த மாநிலமாகும். இந்த சமூக சீர்திருத்த இயக்கம் வகித்த பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. சாதியால் ஒடுக்கப்பட்ட கோடானு கோடி மக்களுக்கு இட ஒதுக்கீடு - பல நலத் திட்டங்கள் என ஏராள மான நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன என்றால் அது சமூக சீர்திருத்த இயக்கங்க ளின் சாதனையாகும். குறிப்பாக, மக்கள் தொகையில் மிகக் கணிசமான உள்ள பிற் படுத்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்திலும் ஓரளவு பொருளாதார நிலையிலும் மாற்றங் கள் நிகழ்ந்திருக்கின்றன என்றால் அது சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்களிப்பும் இணைந்ததாகும். எனினும், கோடானு கோடி தலித் மக்களை ஒடுக்கும் தீண்டாமை - வன் கொடுமை ஒழிக்கப்படவில்லை - தலித் - பழங் குடி மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. தலித் பழங்குடி மக்கள் சந்தித்து வரும் ஒடுக்குமுறைகள், துயரங்கள் குறித்து ஏராளமான விபரங்கள் நம்முன் விரிந்து, பரந்து கிடக்கின்றன. இவற்றை அறியும் போது மனித நேயம் உள்ளவர்கள் எவரும் நெஞ்சம் பதறா மல் இருக்க முடியாது. நாடு முழுவதும் தலித், பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கீழே தரப்படுகிறது.
தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள்..
2018 - 42793, 2019 – 45961, 2020 - 50291
பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள்
2018 - 6528, 2019 - 7570, 2020 - 8272
2021ஆம் ஆண்டு தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 1.2 சதவீதமும், பழங்குடி மக்க ளுக்கு எதிரான குற்றங்கள் 6.4 சதவீதமும் அதிகரித்துள்ளன. பிஜேபி ஆட்சி நடத்தும் மாநிலங்களிலோ கொடுமைகளின் அளவு சொல்லி மாளாது. உத்தரபிரதேசத்தில் தலித்து களுக்கு எதிரான வன்முறை 2021இல் 25.82 சதவீதம், ராஜஸ்தானில் 14.7 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 14.1 சதவீதம் அதிகரித்துள்ளன. பழங்குடி மக்களை பொறுத்தவரை இந்த உயர்வு மிக அதிகமாகும். மத்திய பிரதேசத்தில் 29.8 சதவீதமும், ராஜஸ்தானில் 24 சதவீதமும் இந்த உயர்வுகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் கணக்கில் எடுத்தால் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் இந்திய ஆண்டு சராசரிக்கு குறைவானதல்ல. விபரம் வருமாறு: 2018 - 1413, 2019 –1144, 2020 - 1274, 2021 - 1177 சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அரசு நிர்வாகம் - காவல்துறையின் அலட்சியமான செயல்பாடுகள் காரணமாக சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்களின் இல்லற வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, தலித் இளைஞர்கள் சாதிஇந்து பெண்களை திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில் தான் படுகொலைகளும், வன்முறைகளும் மிக அதிகமாக நடந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இத்தகைய படுகொலைகள் நடந்துள்ளன. எவ்வளவோ வற்புறுத்தல்கள் - நிர்ப்பந் தங்கள் இருந்த போதிலும் ஒன்றிய, மாநில அரசுகள், சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச் சட்டங்களை கொண்டு வர மறுக்கின்றன. தலித் பழங்குடி மக்கள் மீதான வன்முறை கள் குறித்த வழக்குகளை நடத்துவதிலும் மிகுந்த தாமதமும், பாரபட்சமும் காட்டப்படு கின்றன. தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவங்களில் 96 சதவீதம் வழக்குகளும், பழங்குடிகள் தாக்கப்பட்ட சம்பவங்களில் 95.6 சதவீதமும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இது மிக அதீதமானதாகும். தலித் - பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் மிகக்குறைவாக இருப்பதை காண முடியும். தலித்துகள் தாக்கப்பட்ட வழக்குகளில் 36 சதவீதமும், பழங்குடியினர் தாக்கப்பட்ட வழக்குகளில் 28.1 சதவீதமுமே குற்றவாளி கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். பிஜேபி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் தலித் - பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் மிக அதிக மாக உள்ளன. இந்துத்துவா சக்திகள் உரு வாக்கும் சனாதன மனநிலையன்றி இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?. ஆனால், அனைவருக்கும் வியப்பளிக்கும் வகையில் இடதுசாரிகள் வலுவாக உள்ள மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்களில் தலித் மக்கள் மீதான வன்முறைகளும், வன்கொடு மைகளும் மிக, மிக குறைவாகவும், அரிதாக வுமே நடைபெறுகின்றன என்பதை கீழ்க்கண்ட புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
தலித்துகள் மீதான வன்முறை
மாநிலம் 2018 2019 2020 2021
மே.வங்கம் 119 145 109 108
திரிபுரா 1 0 2 3
இடதுசாரிகள் வலுவாக இருப்பதும் தலித்துகள் - பழங்குடி மக்களின் மிகக் கணிசமானவர்களுக்கு இம்மாநிலங்களில் இடதுசாரி அரசுகளால் நிலம் வழங்கப்ப பட்டிருப்பதும் மிக முக்கிய காரணிகளா கும். வலுவான நிலச்சீர்திருத்தச் சட்டங்களை கொண்டு வந்து பெரும் நிலவுடமையாளர் களிடமிருந்து நிலங்களை எடுத்து பரவலான தலித் மக்களுக்கும், இதர ஏழை, எளிய மக்களுக்கும் இடதுசாரி அரசுகளால் வழங்கப்பட்டன. இந்த அரசியல் துணிச்சல் பிற மாநில அரசுகளுக்கு இல்லை. இடது சாரிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் தலித் மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் ஆதிக்க சாதியினரை சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை. இதோடு அவர்களுக்கு அச்சப்பட்டு அவர்களின் சாதி ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையுமில்லை. தலைநிமிர்ந்து இவர்களால் வாழ முடிகிறது. அடுத்து, தமிழகத்தில் 2008ஆம் ஆண்டு 29 மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட கிராமங்களில் கள ஆய்வுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தின. இந்த ஆய்வுகள் மூலம் 71 வகையிலான தீண்டாமைக் கொடுமைகளையும், 28 வகை யிலான வன்கொடுமைகளையும் கண்டறிய முடிந்தது. அவை வருமாறு:
1. தீண்டாமை வடிவங்கள் தமிழ்நாட்டின் கண்டறியப்பட்ட முக்கிய மான தீண்டாமை வடிவங்கள் வருமாறு:
1. பொதுப்பாதையில் நடக்க முடியாமை, 2. செருப்பு போட்டு நடக்க முடியாமை, 3. சைக்கிளில் செல்ல முடியாமை, 4. தோளில் துண்டு போட முடியாமை, 5. வேட்டியை மடித்துக்கட்டி நடக்க முடியாமை, 6. பாலிஸ்டர் வேட்ட கட்ட முடியாமை, 7. தலையில் தலைப்பாகை கட்ட முடியாமை, 8. முகத்தில் அரும்பு மீசை வைக்க முடியாமை, 9. துணிகள் இஸ்திரி செய்து கொடுக்காமை, 10. துணிகள் சலவைச் செய்து கொடுக்காமை, 11. சில சலவை நிலையங் களில் தலித்துகளுக்கு தனி அலமாரி (இரட்டை அலமாரி), 12. சலூன்களில் முடிவெட்ட முடி யாமை, 13. சில சலூன்களில் தலித்துகளுக்கு தனியான சேர் (இரட்டை சேர்), 14. தேநீர் கடைகளில் இரட்டை குவளை, 15. உணவகங் களில் தலித்துக்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும், 16. சில கிராமங்களில் தலித் உட்பிரிவு வாரியாக 4 குவளைகள், 17. தேநீர்க் கடைகளில் பெஞ்சுகளில் உட்கார முடியாமை, 18. தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது, 19. தேநீர்க் கடைகளில் சிரட்டைகளில் தேநீர் கொடுப்பது, 20. தாகத்தால் தண்ணீர் கேட்கும் தலித்துகளுக்கு குவளைகளில் தண்ணீர் தராமல் கைகளை ஏந்தி குடிக்க வைப்பது, 21. பொதுக் குழாய்களில் தண்ணீர் எடுக்க முடியாமை, 22. சில கிராமங்களில் தண்ணீர் எடுக்க தனியாக நேரம் ஒதுக்குவது, 23. திருவிழா காலத்தில் தலித்துக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது, 24. கிராமங்களில் தலித் அதிகாரிகள் தலைமை தாங்கும் விழாக்கள் புறக்கணிப்பு, 25. குளங்களில் குளிக்க முடி யாமை, 26. சில குளங்களில் தலித்துகளுக்கு தனிப் படித்துறை, 27. ஆலயங்களில் நுழைய அனுமதி மறுப்பு, 28. திருவிழாக்களில் தலித் தெருக்களுக்கு சப்பரம் வராது, 29. ஆலய மண்டகப்படி தலித்துகளுக்கு கிடையாது, 30. ஆயலங்களில் தலித்துகளின் தாம்பூலத்தை தண்ணீர் தெளித்து எடுப்பது, 31. ஆலயங்களில் தலித்துகளுக்கு வழிபட தனியான இடம் (கிறித்துவ தேவாலயங்களிலும் கூட), 32. பொது மயான உரிமை இல்லை, 33. பொது மயானத்தில் சாதி வாரியாக இட ஒதுக்கீடு, 34. தலித்துகளுக்கு எனத் தனி மயானம், 35. தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு, 36. கிராமப் பஞ்சாயத்து தொலைக்காட்சிகளை தலித்துக் ்கள் பார்க்கக் கூடாது, 37. தலித்துகளுக்கு தனியான ரேஷன் கடைகள், 38. தலித்துகள் ஆடு, மாடு வளர்க்கக் கூடாது, 39. பொது ரேஷன் கடைகளில் தலித்துகளுக்கு சில நாட்கள் மட்டும் ஒதுக்குவது, 40. கிராம பொது மேடைகளில் தலித்துகள் பேச, பாட முடியாது, 41. சில கிராமங்களில் தபால்காரர்கள் தலித்துகளின் வீடுகளுக்கு தபால் கொடுப்பதில்லை (சொல்லியனுப்பினால் வந்து வாங்கிச் செல்ல வேண்டும்), 42. சில கிராமங்களில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது, 43. கோவில் திருவிழாக் காலங்களில் ஆதிக்க சக்திகளுக்கு (பழைய ஆண்டைகளின் வாரிசுகள்) தலித்துகள் ஆடுகள் இலவசமாகக் கொடுப்பது, 44. கோவில் திருவிழா காலத்தில் கையில் காப்பு கட்டிய பிறகு தலித்துகள் முகத்தில் முழிக்கக் கூடாது, 45. செத்த விலங்குகளை அப்புறப்படுத்தக் கட்டாயப்படுத்துவது, 46. மயான வேலைகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்துவது, 47. பறையடிக்குமாறு கட்டாயப்படுத்துவது, 48. பேருந்து நிறுத்த நிழற்குடையில் தலித்துகள் உட்கார முடியாது, 49. மரணம் நேர்ந்தால் அக்குடும்பத்தின் உற வினர்களுக்கு தகவல் சொல்ல கட்டாயப் படுத்துவது (பஸ் கட்டணம் மட்டும் தருவார்கள் - உணவு கொடுத்தால் தான் சாப்பிட முடியும்), 50. ஆதிக்க சக்திகளின் குடும்பத்திற்கு இலவச மாக உடலுறுப்புக் கொடுப்பது, 51. திருமணங் களில் பொதுப் பந்திகளில் உணவு அருந்த முடியாது, 52. தனியார் திருமண மண்டபங் களை தலித்துகளுக்கு வாடகைக்கு தர மாட்டார்கள், 53. வசதி படைத்தவர்களாக இருந்தாலும் நகர்புறங்களில் சிலவற்றில் தலித்துகளுக்கு வாடகை வீடு கிடைக்காது, 54. கிராமப்புறங்களிலும் தலித்துகள் வாழ ஊருக்கு வெளியே தனியாக சேரிகள் தான், 55. பெயர்களில் மரியாதையான பகுதியை வெட்டி விடுவது (மாடசாமியை “மாடா”, முனிய சாமியை “முனியா”), 56. மலம் சுமக்கக் கட்டா யப்படுத்துவது, 57. பள்ளிக் கூடங்களில் தலித் (அருந்ததியர்) மாணவர்களை கழிப்பிடம் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது, 58. வயதான பெரியவர்களையும் ஆதிக்க சாதி சிறுவர்கள் பெயர் சொல்லியும், வாடா, போடா என்றும் அழைப்பது, 59. தனியார் கல்லூரிகளில் தலித்துகளை நிர்வாகப் பிரிவில் நியமனம் செய்ய மாட்டார்கள், 60. சில பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி இல்லை, 61. தலித் குடியிருப்புகளிலிருந்து பொதுத் தெருவுக்கு செல்ல முடியாமல் தடுப்புச் சுவர் கட்டுவது (உத்தபுரம் சுவர் 600 மீட்டர்), 62. கிராமங்களில் - சில நகரங்களில் பொதுத்தெருவிலிருந்து தலித் தெருவிற்கு நுழைய முடியாதபடி சுவர்கள் கட்டப்பட்டிருப்பது (வளைவு) இதர ஜாதி தெருக்களில் இப்படி வளைவு இருக்காது, 63. அரசாங்கமே துப்புறவுப் பணியாளர்களாக தலித் (அருந்தியர்களை) மட்டுமே நியமனம் செய்வது, 64. அலுவலகங்களில் தலித் பிரிவினருக்கு கட்டுப்பாடு, தீண்டாமை - குறிப்பாக, சுகாதாரப் பணியாளர்கள், 65. கூலி வேலை செய்யும் தலித்துகள் உணவு நேரங்களில் அவர்களே தட்டுக் கொண்டு வரவேண்டும், 66. தலித் மாணவர்களை ஆசிரியர்கள் பாரபட்சமாக நடத்துவது, 67. பொது இடத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தலித் தபால்காரரை போட அனுமதிக்காதது, 68. பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து திருப்பித் தர மறுப்பது - 13 லட்சம் ஏக்கர், 69. தலித்துகளின் ஊராட்சி களை போதுமான நிதி ஒதுக்காமல் அரசு நிர்வாகமே புறக்கணிப்பது, 70. தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளை செயல்பட விடாமல் தடுப்பது, 71. கிராமப் பொதுச் சொத்தில் தலித்துக்களுக்கு பங்கு கிடையாது.
2. வன்கொடுமைகள்
1. தலித்துகள் சாதிக் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் தண்டனைகள் வழங்கப்படும் நிலை ஏராளமான கிராமங்களில் நிலவுகி ன்றன. 2. மலத்தை தின்ன வைப்பது (திண்ணி யம்), 3. தலித்துக்கள் வாயில் சிறுநீர் கழிப்பது. 4. ஆதிக்க சக்திகளின் விருப்பத்திற்கு மாறாக உள்ளாட்சிகளில் பஞ்சாயத்து தலைவராக அல்லது இதர பொறுப்புகளுக்கு வந்தால் படு கொலை (மேலவளவு), 5. தலித் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, 6. உரிமை கள் கேட்டால் உயிரோடு கொளுத்துவது (கீழ வெண்மணி), 7. தலித்துகளின் குடிசைகளுக்கு தீயிடுவது, 8. தலித்துகளை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக அடித்து உதைப்பது, 9. தலித் தெருவில் உள்ள நாய் ஆதிக்க சக்தியைச் சார்ந்தவர்களை கடித்தால் தலித் தெருக்களில் உள்ள மொத்த நாய்களையும் அடித்துக் கொல்லுவது (பெரம்பலூர் மாவட்டம்), 10. போராடிப் பெற்ற பொதுப் பாதையை தலித்துகள் பயன்படுத்த முடியாதபடி ஆட்டுரல், அம்மிக்கல் போட்டு வைப்பது. பாத்திரம் கழுவுவது, கற்களைக் குமித்து வைப்பது (உத்தபுரம்), 11. தலித்து கள் சாதி மாறி திருமணம் செய்தால் கட்டாயப் படுத்தி விஷம் கொடுத்து கொல்லுவது (புதுக் கோட்டை மாவட்டம்), 12. மனித உரிமைகள் கோரும் தலித்துகளை இதர சாதிகள் அனை வரையும் தூண்டிவிட்டு சமூக பகிஷ்காரம் செய்ய வைப்பது (விருதுநகர் மாவட்டம், பெருங்கிணறு உள்பட பல கிராமங்கள்), 13. அரசு சமுதாயக் கூடங்களை வற்புறுத்தி தலித்துகள் பயன்படுத்தினால் தலித்துகளின் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று தாக்குவது (அந்தியூர்), 14. ஆதிக்க சக்திகள் முன்னால் ஆயிரம் முறை காலில் விழ வைப்பது. 15. அரசு நிர்வாகமே தலித்துகளுக்கு பொது இடத்தைப் பயன்படுத்த அனுமதி மறுப்பது (சுடுகாட்டுப்பாதைகள்) - மீறினால் தலித்துகளின் சடலங்களை காவல்துறையே கைப்பற்றி ஆதிக்க சக்திகள் விரும்பும் வழியாகக் கொண்டு சென்று அடக்கம் செய்வது (திருச்சி மாவட்டம்), 16. மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவுகட்ட மத்திய அரசு ஒதுக்கிய பணத்தை தமிழக அரசு முழுமையாகச் செலவிடவில்லை. 17. சம உரிமை கேட்டு போராடினால் காவல் துறையே தலித்துகள் மீது கொடூரத் தாக்கு தல் நடத்துவது. துப்பாக்கிச்சூடு, (நாலுமூலைக் கிணறு, கொடியங்குளம், சங்கரலிங்கபுரம், உத்தபுரம் காவல்துறையினர் தாக்குதல்), 18. பொது ஆலயங்களில் நுழைய முனையும் தலித்துகளை காவல்துறையே பகிரங்கமாக அடித்து உதைத்து விரட்டுவது (திருவள்ளுர் மாவட்டம், சிவகங்கை கண்டதேவி உள்பட), 19. ஜனநாயக உரிமைகளுக்கு தலித்துகள் போராடியதால் அரசே “அமைதிக்குழு” என்ற பெயரில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் உரிமைகளைக் கட்டாயப் பஞ்சாயத்து செய்வது, 20. வன்கொடுமை வழக்குகள் பதிவாகாமல் அரசு நிர்வா கம், காவல்துறை உள்ளிட்டு தலையிட்டு சமரசம் செய்து வைப்பது, 21. மீறி வன் கொடுமைப் புகார் கொடுத்தால் எதிர் மனுதாரரிடம் புகார் வங்கி வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்வது, 22. வன்கொடுமைக்கு எதிராகப் போராடிய வர்கள் மீதே பொய்ப் புகார் வாங்கி வன்கொடுமை வழக்கு ஆதிக்க சக்திகள் தூண்டுதலால் காவல்துறை பதிவு செய்வது. 23. வன்கொடுமைப் பற்றிய புகார் பதிவு செய்யப் பட்டு வழக்குகளாக மாறும்போது சாட்சி யங்களைக் கலைத்து விடுவது - வழக்குகளை காவல்துறை முறையாக நடத்தாமை, 24. பல கிராமங்களில் தலித்துகளுக்கு எதிராக ஆதிக்க சக்திகளுடன் காவல்துறை அரசு நிர்வாகம் கூட்டுச் சேர்ந்து நிற்பது, 25. வன்கொடுமைப் பிரச்சனைகளில் விசாரணை செய்ய தலித் அதிகாரிகளை அரசு நியமனம் செய்து தலித்துகளுக்கு எதிரான தீர்ப்பு எழுத வைப்பது (நாலுமூலைக் கிணறு) 26. தலித்து கள் தாக்கப்படுவது, அவமானப்படுத்தப் படுவது, 27. தலித் பெண்கள் பாலியல் பலாத் காரம், குடிசைகள் தீ வைப்பு போன்றவை தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள். சமீப ஆண்டுகளில் புதிய வகையான தீண்டாமை - வன்கொடுமை வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வு முடிவுகள் அப்போதே பத்திரிகைகள் வாயிலாக அம்பலப்படுத்தப் பட்டன. பல்வேறு பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் இச்செய்தியை வெளியிட்டன. பரவ லான மக்களிடையே வியப்பையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்திய நிகழ்வாக இது இருந்தது. இந்த ஆய்வு முடிவுகளை வெளியிடுவ தோடு மட்டும் நிற்காமல் இதில் சில பிரச் சனைகளை தேர்வு செய்து அவற்றை முடி வுக்கு கொண்டு வர நேரடி நடவடிக்கைகள், போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் பல கிராமங்களில் தீண்டாமையின் சில வடிவங்கள் ஒழிக்கப்பட்டன. உத்தப்புரம் சுவர் உடைப்பு, பல ஆலய நுழைவு போராட் டங்களை, இரட்டைக்குவளை ஒழிப்பு, பொதுப் பாதை பயன்பாடு, மயான பயன்பாடு, மயான பாதை பயன்பாடு, சலூன் உரிமை... இன்னும் பல உரிமைகளை இப்போராட்டங்கள் மூலம் பல கிராமங்களில் வென்றெடுக்க முடிந்தது. இத்தகைய தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களை தொடர்ந்து நடத்த சிபிஐ(எம்) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுதிபூண்டுள்ளன.