திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் போராட்டம் காந்தி மார்க்கெட் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி, ஜுன் 27- திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சுமார் நூறு ஆண்டு களுக்கும் மேலாக பல தலை முறையாக சுமைதூக்கும் தொழி லாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25 ஆண்டு காலமாக சங்கம் அமைத்து கூலி உயர்வு, போனஸ், பணி பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை போராடியும், தொழி லாளர் துறை மூலமாகவும் பெற்று வந்தனர். இந்நிலையில் வேஸ்ட் பேப்பர் கடை முதலாளிகள், மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்து கொள்ளலாம் என உத்தரவு பெற்றுள்ளனர். அந்த உத்தரவில் 20 ஆண்டு காலம் அங்கு வேலை செய்யும் 42 தொழிலாளர்களை வெளியேற்றவோ, வேலை நீக்கம் செய்யவோ எந்த உத்தரவும் இல்லை. இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை சட்டவிரோதமாக இந்த பிரச்சனையில் உள்ளே நுழைந்து, பீகார் மாநில தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு அமர்த்தியுள்ள முதலாளிகளுக்கும், பீகார் தொழிலாளர்களுக்கும், நூற்றுக்கணக்கான காவல்துறை யினரை நிறுத்தி பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள். இந்த செயல் தொழிலாளர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும். மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலாகும். மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொழிலாளர் உதவி ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது. மேலும், மதுரை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர் தரப்பு ரிட் மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் திருச்சி மாநகர காவல்துறையை கண்டித்து அனைத்து சுமைப்பணி தொழிலா ளர்கள் சங்கம் சார்பில், ஜுலை 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள், குடும்பத்தோடு முற்றுகையிடும் போராட்டம் நடை பெற உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.